search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devadanapatti sand robbery"

    தேவதானப்பட்டி அருகே மஞ்சளாற்றில் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மஞ்சளாற்று படுகையில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீருக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மணல் கொள்ளையர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    போலீசாரும் மணல் திருடும் கும்பலை பிடித்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. தேவதானப்பட்டி போலீசார் கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு ஒருவர் டிராக்டரில் மணல் கடத்திக் கொண்டு இருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் கண்ணன் என தெரிய வந்தது. மேலும் அனுமதியின்றி மணல் அள்ளியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து கண்ணனை கைது செய்து டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×