search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devadanapatti merchant attack"

    தேவதானப்பட்டி அருகே பூண்டு வியாபாரியை தாக்கிய வாலிபர் கைதானார்.

    தேவதானப்பட்டி:

    தேவதானபட்டி அருகே இ.புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரபூபதி (வயது 29). பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கெங்குவார்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பூண்டு வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது கெங்குவார்பட்டி ராமர் கோவில் தெருவை சேர்ந்த வாலிபர் பிரசாத் (28) என்பவர் குடிபோதையில் வந்தார். அவர் மகேந்திரபூபதியிடம் தகராறு செய்து எங்கள் பகுதிக்கு வரக்கூடாது என்று கூறினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த பிரசாத் பூண்டு வியாபாரி மகேந்திர பூபதியை தாக்கி மோட்டார் சைக்கிளின் கண்ணாடியை உடைத்தார்.

    இது குறித்து மகேந்திரபூபதி தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து பிரசாத்தை கைது செய்தனர்.

    ×