search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deepavali seat"

    ஜீவானந்தபுரத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 லட்சம் மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை ஜீவானந்தபுரத்தை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி பாஞ்சாலி. இவர்களுக்கு அய்யப்பன் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். ஆதிமூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பாஞ்சாலி தீபாவளி சீட்டு பிடித்தார். மாதம் ரூ.100 வீதம் செலுத்தினால் தீபாவளி பண்டிகையின் போது பாத்திரத்துடன் இனிப்பு, தங்ககாசு, பட்டாசு போன்றவை அளிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

    இதனை நம்பி திருப்பூர்குமரன் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி குணா உள்பட அதேபகுதியை சேர்ந்த 170-க்கும் மேற்பட்டோர் தீபாவளி ஏலச்சீட்டில் சேர்ந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் திடீரென பாஞ்சாலி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாயமானார். பலநாட்களாகியும் பாஞ்சாலி வீடு திரும்பாததால் தீபாவளி சீட்டு பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. சுமார் ரூ. 2 லட்சம் வரை பாஞ்சாலி மோசடி செய்துள்ளார்.

    இதுகுறித்து குணா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×