என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » death deer
நீங்கள் தேடியது "Death deer"
திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் 20 மான்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெறும்பூர்:
திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் உள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்ட மான்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக இங்கு வளர்க்கப்பட்டு வரும் மான்கள் மர்மமான முறையில் திடீர், திடீரென இறந்து வந்தன. இதுவரை 20 மான்கள் வரை இறந்துள்ளன. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை.
பருவநிலை மாற்றத்தால் மான்கள் இறந்ததா? அல்லது விஷ பூச்சிகள் கடித்ததால் இறந்ததா? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷச்செடிகளை சாப்பிட்டதால் இறந்ததா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் மான்களின் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்புகள் சேர்ந்ததால் அவை மூச்சி விட முடியாமல் இறந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மான்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன்பிறகு சாவுக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும். #tamilnews
திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் உள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்ட மான்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக இங்கு வளர்க்கப்பட்டு வரும் மான்கள் மர்மமான முறையில் திடீர், திடீரென இறந்து வந்தன. இதுவரை 20 மான்கள் வரை இறந்துள்ளன. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை.
பருவநிலை மாற்றத்தால் மான்கள் இறந்ததா? அல்லது விஷ பூச்சிகள் கடித்ததால் இறந்ததா? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷச்செடிகளை சாப்பிட்டதால் இறந்ததா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் மான்களின் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்புகள் சேர்ந்ததால் அவை மூச்சி விட முடியாமல் இறந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மான்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன்பிறகு சாவுக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X