என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » dalai lama
நீங்கள் தேடியது "Dalai Lama"
கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநிலம் புத்த கயாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவை கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் 5 பேர் கைதாகியுள்ளனர். #DalaiLama
பெங்களூர்:
திபெத் புத்தமதத் தலைவர் தலாய்லாமா கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநிலம் புத்த கயாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார்.
அப்போது அங்கு சக்தி வாய்ந்த 2 வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த 2 வெடிகுண்டுகளையும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதையடுத்து தலாய் லாமா, பீகார் கவர்னர் சால்ஜி டாண்டன் ஆகியோரை கொல்ல முயன்றதாக ஜே.எம்.பி. அமைப்பினர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் கடந்த 27-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராம்நகரில் பதுங்கி இருந்த ஜே.எம்.பி. அமைப்பை சேர்ந்த ஜவாஹில் அஸ்லாம், அகமதுஅலி, பைகம்பர் ஷேக், முனீர்நூர், அஸ்சாம் மொஹீன் ஆகிய 5 பேரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை பலத்த பாதுகாப்புடன் பீகாருக்கு அழைத்து சென்றனர்.
கைதான 5 பேரையும் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #DalaiLama
திபெத் புத்தமதத் தலைவர் தலாய்லாமா கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநிலம் புத்த கயாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார்.
அப்போது அங்கு சக்தி வாய்ந்த 2 வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த 2 வெடிகுண்டுகளையும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதையடுத்து தலாய் லாமா, பீகார் கவர்னர் சால்ஜி டாண்டன் ஆகியோரை கொல்ல முயன்றதாக ஜே.எம்.பி. அமைப்பினர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் கடந்த 27-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராம்நகரில் பதுங்கி இருந்த ஜே.எம்.பி. அமைப்பை சேர்ந்த ஜவாஹில் அஸ்லாம், அகமதுஅலி, பைகம்பர் ஷேக், முனீர்நூர், அஸ்சாம் மொஹீன் ஆகிய 5 பேரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை பலத்த பாதுகாப்புடன் பீகாருக்கு அழைத்து சென்றனர்.
கைதான 5 பேரையும் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #DalaiLama
திபெத்திய மக்களின் விடுதலைக்காக போராடி வரும் புத்த மத தலைவர் தலாய் லாமா இன்று காஷ்மீர் மாநிலத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
ஜம்மு:
சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத் நாட்டின் விடுதலைக்காக நாடு கடந்த போராட்டம் நடத்திவரும் திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்தபடி திபெத் விடுதலை போராட்டத்தை வழிநடத்தி வருகிறார்.
சீன அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி தலாய் லாமாவுக்கு இந்தியா அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.
இந்நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தலாய் லாமா, இன்று லடாக் பகுதியில் ஆதரவாளர்கள் மத்தியில் கேக் வெட்டி தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடினார். #DalaiLamabirthday
சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத் நாட்டின் விடுதலைக்காக நாடு கடந்த போராட்டம் நடத்திவரும் திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்தபடி திபெத் விடுதலை போராட்டத்தை வழிநடத்தி வருகிறார்.
சீன அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி தலாய் லாமாவுக்கு இந்தியா அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.
இந்நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தலாய் லாமா, இன்று லடாக் பகுதியில் ஆதரவாளர்கள் மத்தியில் கேக் வெட்டி தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடினார். #DalaiLamabirthday
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான தனிப் பாடத்திட்டதை ஏற்படுத்தியுள்ளது. #HappinessCurriculum #Kejriwal
புதுடெல்லி:
டெல்லி அரசு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான தனிப் பாடத்திட்டதை ஏற்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தீர்மானித்தது.
இதை தொடர்ந்து இந்த பாடத்திட்டத்துக்கான பாடங்களை உருவாக்குவதில் கல்வியாளர்கள் குழு இறங்கியது. இந்த குழுவின் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்ட மகிழ்ச்சிக்கான (Happiness Curriculum)
புதிய பாடத்திட்டத்தை திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமா இன்று தொடங்கி வைத்தார்.
டெல்லி தியாகராஜ் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், வெள்ளையர் ஆட்சிக்காலத்து 150 ஆண்டுகால பழைமைவாய்ந்த பாடத்திட்டத்துக்கு மாற்றாக தற்கால சூழலுக்கு ஏற்ப இந்த புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
நாட்டுப்பற்று மற்றும் தியானத்துடன் கூடிய பாடங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய பாடத்திட்டம் நாள்தோறும் அனைத்து வகுப்புகளிலும் 45 நிமிடங்கள் நடைபெறும். இதை தொடங்கி வைக்க தலாய் லாமாதான் சிறந்தவர் என நாங்கள் தேர்வு செய்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.
முழுமையான அறிவு, ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் வெளியுலகுக்கு சென்று சகோதரத்துவம், ஒருமைப்பாடு, அமைதி ஆகிய அறவழிகளின் மூலம் புதிய சமுதாயத்தை கட்டமைப்பார்கள் என டெல்லி கல்வித்துறை மந்திரி மற்றும் துணை முதல் மந்திரியுமான மணிஷ் சிசோடியா கூறினார். #HappinessCurriculum #Kejriwal
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X