search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooking gas"

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 44 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக பைப்பில் கியாஸ் சப்ளை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #CookingGas #GasPipeline
    சென்னை:

    தமிழ்நாட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வீடுகளுக்கு பைப் லைன் மூலம் நேரடியாக கியாஸ் வினியோகம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    மத்திய நகர கியாஸ் வினியோக திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் இந்தியாவில் நகரங்கள் முழுவதிலும் பைப் லைன் மூலம் கியாஸ் சப்ளை செய்யும் வசதியை செயல்படுத்துவதாகும்.

    இந்த திட்டம் டெல்லி, மும்பை நகரங்களில் உள்ளது. தற்போது சென்னையிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை குழு ஆலோசனை நடத்தி வந்தது.

    9-வது கட்ட பேச்சுவார்த்தை முடிவில் சென்னையில் பைப் லைன் மூலம் கியாஸ் சப்ளை செய்ய சாத்திய கூறு கண்டறியப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதற்காக கியாஸ் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.

    சென்னையில் தனியார் நிறுவனங்களான தோரண்ட்டு கியாஸ் நிறுவனம் மற்றும் ஏ.ஜி.பி. எல்.என்.ஜி. மார்க்கெட்டிங் நிறுவனம் மூலம் வீடுகளுக்கு பைப் லைன் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படுகிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 44 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக பைப்பில் கியாஸ் சப்ளை செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.


    இந்த 3 மாவட்டங்களில் 333 கியாஸ் நிரப்பும் நிலையங்கள் அமைய உள்ளன. இதில் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பி கொள்ளலாம். இதில் ஒரு கிலோ கியாஸ் 40 ரூபாய்க்கு கிடைக்கும்.

    மேலும் தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளுக்கு பைப் லைன் கியாஸ் திட்டத்தை செயல்படுத்த அதானி கியாஸ் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் டெண்டர் எடுத்துள்ளன.

    சராசரியாக ஒரு கிலோ கியாசுக்கு 20 முதல் 25 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும்.

    தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் 16¼ லட்சம் வீடுகளுக்கு பைப் லைன் கியாசும், 557 கியாஸ் நிரப்பும் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது டெல்லி நகரின் வீட்டில் பைப் லைன் இணைப்பு கொடுக்க ரூ. 5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பின் மாதந்தோறும் கியாஸ் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பைப் லைனில் மீட்டர்கள் பொருத்தப்படும்” என்றார்.

    இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் நேரடி கியாஸ் வினியோக திட்டத்தை 2020-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. #CookingGas #GasPipeline
    கியாஸ் சிலிண்டர் கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. #Gas #IndianOilCompany

    சென்னை:

    சமையல் கியாஸ் விற்பனையில் மத்திய அரசின் 3 எண்ணை நிறுவனங்கள் ஈடுபட்டு இருந்தாலும் இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி) தான் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

    சென்னை மண்டலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் சுமார் 40 ஆயிரம் சமையல் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

    வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் போது அவர்கள் அதற்கான கட்டணத்தை பணமாக செலுத்தும் நிலை தற்போது உள்ளது. இதனால் சில்லறை பிரச்சினை ஏற்படுகிறது.

    மேலும் கூடுதல் பணம் தந்தால் தான் சிலிண்டரை வினியோகம் செய்வோம் என்று கியாஸ் ஏஜென்சி ஊழியர்கள் பல இடங்களில் தகராறு செய்கின்றனர்.

    ஒவ்வொரு முறையும் வீடுகளில் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது ஒரு சிலிண்டருக்கு ரூ.50 கூடுதலாக கட்டாயம் தர வேண்டும் என்று அடாவடித் தனம் செய்கின்ற நிலை உள்ளது.

    சிலிண்டர் விலைக்கான தொகையை கொடுத்தால் ஏற்பதில்லை. இது போன்ற பிரச்சினைகளை தடுக்க பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பேடிஎம், போன்ற மின்னணு அட்டைகளை பயன்படுத்தி இ.வேலட் முறையில் சிலிண்டருக்கான கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான பயிற்சி சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் சிலிண்டரை வாங்கும் போது ஏற்படும் சில்லரை பிரச்சினை, அதிக தொகை வசூலிப்பது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஐ.ஓ.சி அதிகாரிகள் தெரிவித்தனர்.#Gas #IndianOilCompany

    கடந்த வாரம் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் கியாஸ் நிரப்பும் ஊழியர்கள் விடுமுறையில் சென்றதால் சென்னையில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பதிவு செய்து 7 நாட்களுக்கு மேலாகியும் சிலிண்டர் வழங்கப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையாக கருதப்படும் சமையல் கியாஸ் கடந்த 4 வருடங்களில் படிப்படியாக அதிகரித்துள்ளது. முன்பு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் இப்போது ரூ.700-ஐ தாண்டி விட்டது.

    இதில் மத்திய அரசு மானியமாக ரூ.150 கொடுத்து வருகிறது. வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பல்வேறு சீரமைப்புகளை எண்ணை நிறுவனங்கள் செய்து வருகின்றன.

    வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் பதிவு செய்த 3 நாட்களில் சிலிண்டர் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். விற்பனை விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படுகிறதோ அதற்கு மேலாக வசூலிக்க கூடாது என்பது போன்ற விதிமுறைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமையல் கியாஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வினியோகஸ்தர்களுக்கு போன் செய்து கேட்டும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் லோடு வரவில்லை அதனால் தாமதமாகிறது என்று காரணம் கூறுகிறார்கள்.

    கியாஸ் நிரப்பும் தொழிற்சாலையில் ஊழியர்கள் குறைவாக இருந்ததால் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஒரு கியாஸ் வினியோகஸ்தர் கூறியதாவது:-

    கடந்த வாரம் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் கியாஸ் நிரப்பும் ஊழியர்கள் சிலர் விடுமுறையில் சென்று விட்டனர். அதனால்அந்த பணி பாதிக்கப்பட்டது. குறைந்த அளவில் தான் சிலிண்டர் வினியோகிக்கப்பட்டது. எங்களுக்கு வரவேண்டிய லோடு தாமதம் ஆனதால் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் தாமதமாகி வருகிறது.

    சிலிண்டர் வினியோகம் படிப்படியாக சீராகி வருகிறது. அதனால் இன்னும் ஒரிரு நாளில் தட்டுப்பாடு பிரச்சனை தீர்ந்து விடும் என்றார்.

    வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகிக்கும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வதோடு சிலிண்டர் விலையை விட ரூ.40, ரூ.50 கூடுதலாக தந்தாக வேண்டும் என்று அடாவடித்தனமாக பேசுகிறார்கள். கூடுதல் தொகை தரவில்லை என்றால் சிலிண்டர் அடுத்த மாதம் சப்ளை செய்யமாட்டேன். அலைந்து திரியுங்கள் என்று தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருகின்றனர்.

    கியாஸ் ஏஜென்சிகளிடம் வேலை பார்க்கும் ஊழியர்களின் தரம் தாழ்ந்த நடவடிக்கையால் எண்ணை நிறுவனம் மீதும், சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் மீதும் வாடிக்கையாளர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது. சிலிண்டர் வழங்கும் ஊழியர்கள் பொதுமக்களிடம் எப்படி நடக்க வேண்டும், கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உறுதிமொழியினை வினியோகஸ்தர்கள் கட்டாயம் பின்பற்ற எண்ணை நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் ஆதங்கமாக உள்ளது. #GasCylinder #CookingGas
    ×