என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Consumer Council's Request"
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார மேடை அருகே உள்ள விநாயகர் கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது
- கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் போது இந்த விநாயகருக்கும் தீபாராதனை நடைபெறும். எனவே விரைந்து கோவிலை புதுப்பிக்க வேண்டும்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார மேடை அருகே உள்ள விநாயகர் கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் போது இந்த விநாயகருக்கும் தீபாராதனை நடைபெறும். எனவே விரைந்து கோவிலை புதுப்பிக்க வேண்டும்.
மேலும், கோவில் பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்கள் வராததால் பஸ்சுக்கு பக்தர்கள் பகத்சிங் பஸ் நிலையம் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே கோவில் நிர்வாகம் சார்பில் பகத்சிங் பஸ் நிலையத்திற்கு சர்குலர் பஸ் விட வேண்டும். கடற்கரை வளாகத்தில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தற்காலிக பெண்கள் உடை மாற்றும் இடம் அமைக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்