search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Complaint to Collector"

    கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கால்வாய் கிராம பஞ்சாயத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு உள்ளதாக கலெக்டரிடம் அ.ம.மு.கவினர் புகார் அளித்துள்ளனர்.
    செய்துங்கநல்லூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கருங்குளம் ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் சிவசுப்பிரமணியன் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கால்வாய் ஊராட்சி கால்வாய் மற்றும் திருவரங்கப்பட்டி கிராமங்களில் ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் போலியான நபர்கள் பெயரில் அடையாள அட்டைகளை உருவாக்கி செய்யாத வேலைக்கு செய்ததாக கணக்கு காட்டி வங்கிக் கணக்குகள் மூலம் அரசுப்பணத்தை கையாடல் செய்கிறார்கள்.

    ஒன்றிய அலுவலகத்தில் எங்களது ஊராட்சிக்கென வழங்கப்பட்ட தெரு விளக்குகளை வெளிமார்க்கெட்டில் விற்று விட்டு மின் கம்பத்தில் மாட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு செய்துள்ளனர். தனிநபர் கழிவறை திட்டத்தில் கட்டாத கழிவறைகளை கட்டியதாக வேறு இடத்தில் உள்ள கட்டிய கழிவறை முன் போட்டோ எடுத்து அதன் மூலம் அரசுப்பணத்தை கையாடல் செய்துள்ளனர். எனவே பஞ்சாயத்து கிளார்க் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ×