search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chitra Festival"

    • சித்திரை திருவிழாவை குளிர வைத்த மழையால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
    • மழையை பொருட்படுத்தாமல் வழக்க மாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் திரண்டதை காணமுடிந்தது.

    மதுரை

    மதுரையில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்தது. கடந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. தினமும் 100 டிகிரியை தாண்டி பதிவானதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பகல் முழுவதும் கொளுத்திய வெயிலால் இரவு நேரங்களில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. அனல் காற்று, புழுக்கம் காரணமாக பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. வழக்கமாக ஆழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று மதுரையில் மழை பெய்யும் என்பது பக்தர் களின் நம்பிக்கை. அதன்படி கடந்த காலங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது மழை பெய்துள்ளது.

    அதன்படி இந்த ஆண்டும் கோடை வெயிலை தணிக்க மழை பெய்யும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர். சித்திரை திருவிழா 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை மதுரை நகர் முழுவதும் மழை அடித்து கொட்டியது. ஒரு மணிநேரத்திற்கும் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மழையால் மதுரை நகரில் அதுவரை நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. தொடர்ந்து விழா தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை மாலை நேரங்களில் அவ்வப்போது கன மழை முதல் தூரல் மழை பெய்தது.

    இதனால் கோடை என்பதையே மக்கள் மறந்து போகும் அளவுக்கும் மழை இருந்தது. மேலும் வெயிலின் தாக்கம் குறைந்து பகல் நேரங்களில் மேக மூட்டத்துடனும் காணப் பட்டது.

    ஆனால் சுவாமி- அம்பாள் வீதி உலா மற்றும் முக்கிய திருவிழா நிகழ்ச்சி கள் மழையால் தடை படவில்லை. இருப்பினும் பொதுமக்கள் மழையை பொருட் படுத்தாமல் வழக்க மாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் திரண்டதை காணமுடிந்தது.

    • சித்திரை திருவிழா 5-ந் தேதி தொடங்குகிறது.
    • பல வர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    பரமக்குடி

    பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண ஜனங்களுக்குச் சொந்தமான சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் கோடை திருவிழா சைத்ரோத்ஸவம் 12 நாட்கள் நடைபெறுகிறது. இன்று

    (30-ந் தேதி) கோடை திருவிழா தொடங்கி தொடர்ந்து திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    வருகிற 5-ந் தேதி (வெள்ளி)அதிகாலை 4.50 மணியளவில் கோவில் படித்துறையின் எதிரே உள்ள வைகையாற்றில் வண்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு இறங்குகிறார். சித்ரா பவுர்ணமி நிலா வெளிச் சத்திலும், தீவட்டி ஒளியிலும் வாண வேடிக்கை முழங்க வைகையாற்றில் இறங்கும் கள்ளழகரை கோவிந்தா...கோவிந்தா... என்று கூடி இருக்கும் திரளான பக்தர்கள் விண்ணை முட்டும் அளவுக்கு முழங்கி பக்தி பரவசத்துடன் சுவாமியை வணங்குவார்கள்.

    வைகையாற்றில் இறங்கும் கள்ளழகர் பல மண்டகப் படிகளுக்குச் சென்று விட்டு, மேலச்சத்திரம் பகுதியில் உள்ள தல்லாகுளம் மண்டகப் படியை சென்றடைவார். தொடர்ந்து, அன்று காலை 9.55 மணியளவில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வீற்றிருந்து தல்லாகுளம் மண்டகப்படியில் இருந்து வெளியேறுவார். அப்போது விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் என்னும் துருத்தி மூலம் மஞ்சள் நீரை கள்ளழகர் மீது பீய்ச்சியடிப்பார்கள்.

    பின்னர் மேலச்சத்திரம், ஓட்டப்பாலம், காட்டு பரமக்குடி, மஞ்சள்பட்டினம் சென்று அங்குள்ள கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்பு, ஆற்றுப் பாலம், நகர் பகுதி வழியாக வந்து அனுமார் கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிப்பார். மாலையில அங்கிருந்து புறப்பட்டு பூக்கடை பஜார், பெரிய கடைவீதி, நகைக்கடை பஜார், காந்தி சிலை சமீபம், பெருமாள் கோவில், எமனேசுவரம் சென்று வண்டியூர் என்னும் காக்காத்தோப்பை சென்றடைந்து அங்குள்ள கருப்பணசுவாமி கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    இதனிடையே பரமக்குடி ஆற்றுப் பாலம் பகுதியில் இருந்து ஆயிரம் பொன் சப்பரம் வைகையாற்று மணலில் சுமார் 2 கி.மீ.தூரம் இழுத்து செல்லப்பட்டு காக்காத்தோப்பை சென்றடையும். அங்கு சப்பரத்தினுள் கள்ளழகரை கொடுத்து வாங்குவார்கள். இந்த நிகழ்ச்சிகளை பார்க்க பரமக்குடி மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகள், சுற்றுப்புற கிராம மக்கள் பல்லாயிரக்க ணக்கானவர்கள் குழந்தைகள், குடும்பத்தினருடன் திரளாக திரண்டு வந்து வைகையாற்று மணலில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தும், நிலா ஒளியில் விளக்கெண்ணெய் தோசை உள்பட பல வகையான உணவு வகைகளை சாப்பிட்டும் மகிழ்வார்கள்.

    6-ந்தேதி (சனி) இரவு வாணியர் உறவின்முறை யார்களின் மண்டகப்படியில் தசாவதார காட்சிகள் நடைபெறும். 7-ந் தேதி (ஞாயிறு) மட்டா மண்டகப்படியிலும், 8-ந்தேதி (திங்கள்) சீனிவாசய்யர் சன்ஸ் மண்டகப்படியிலும், 9-ந்தேதி (செவ்வாய்) காலை மண்டகப்படியில் இருந்து கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி வைகையாற்றில் இருந்து புறப்பட்டு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நகரின் பல முக்கிய வீதிகளில் வலம் வந்து மாலை கோவிலுக்குள் சென்றடைவார்.

    அன்று இரவு பெருமாள் கண்ணாடி எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும். 10 -ந் தேதி (புதன்) உத்ஸவ சாந்தியும், 11-ந்தேதி (வியாழன்) வாணியர் உறவின்முறையார்கள் சார்பில் பாலாபிஷேகமும் நடைபெறும். இரவு பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி விடிய... விடிய.. நாதசுரம் முழங்க நகரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மானேஜிங் டிரஸ்டி துடுகுச்சி டி.ஆர்.நாகநாதன், டிரஸ்டி அன்டு டிரசரர் குச்சேரி கே.ஆர்.பாலமுருகன், டிரஸ்டிகள் சலகவா எஸ்.என்.நாகநாதன், கெட்டி ஜி.என்.கோவிந்தன், பொட்டி பி.கே.முரளிதரன் ஆகியோர் செய்துள்ளனர். திருவிழாவையொட்டி, பெருமாள் கோவில் கோபுரம், நகரில் பல வர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • ஐயாறப்பர் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 3-ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வருகிற 7-ந் தேதி வரை 13 நாட்கள் விழா நடக்கிறது.

    முன்னதாக நடந்த கொடியேற்றம் விழாவில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் 29-ந் தேதி (சனிக்கிழமை) மாலை தன்னைத்தான பூஜித்தல் நடைபெறுகிறது.

    அன்று 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.

    வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

    விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

    தேர்4 வீதிகள் வழியாக வந்து நிலையடி அடைந்த உடன் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரதாசம் வழங்கப்படுகிறது.

    மே 6-ந் தேதி(சனிக்கிழமை) முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டி யூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.

    இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.

    7-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் மாலை பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ×