search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Centenary Celebration"

    • கப்பேறு விடுப்பு 1 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 125 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை அமைச்சா் வழங்கினாா்.

    ஊட்டி,

    ஊட்டி அரசு பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில் மக்கள் சேவையில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவை வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தொடக்கி வைத்தாா்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தாா். பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் பொருட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் தொடங்கி அரசு தாவரவியல் பூங்காவில் நிறைவடைந்தது.

    இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், மருத்துவா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா். இதில்

    வனத்துறை அமைச்சா் பேசியதாவது:-

    பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளன. மக்கள் சேவையில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா நீலகிரி மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. இத்துறையின் மூலம் புறநோயாளிகள், உள் நோயாளிகள், கா்ப்பகால பராமரிப்பு, பிரசவ கால தடுப்பு திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ் மருத்துவமனை பிரசவத்துக்கு ரூ.700 நிதி உதவி வழங்கப்படுகிறது. மகப்பேறு விடுப்பு 1 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடா்ந்து, வட்டார மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய 125 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை அமைச்சா் வழங்கினாா். இதில், மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ், ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி, துணை இயக்குநா் பாலுசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன், நகராட்சி ஆணையா் காந்திராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    ×