search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "carpenter worker murder"

    புதுவை அருகே தச்சு தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் பெரியபட்டினத்தார் வீதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 36). தச்சு தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவரும், அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (24), சுரேஷ் (22) ஆகிய 3 பேரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் நண்பர்களாக பழகி வந்தனர். மேலும் வேலை முடிந்ததும் 3 பேரும் ஒன்றாக மரு அருந்துவது வழக்கம். 

    அதுபோல் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் ஒன்றாக மது அருந்தினர். அப்போது மோகன்ராஜுக்கும், சுரேசுக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் தனக்கு ஆதரவாக ஏழுமலை வருவார் என்று சுரேஷ் கூறியதோடு சினிமா படத்தில் வருவது போன்று என்னை தாக்கிய நீ ஏழுமலையை தாக்க முடியுமா? என்று சுரேஷ் விளையாட்டாக பேசினார். 

    அப்போது மோகன்ராஜ் ஆத்திரம் அடைந்து ஏழு மலையிடம் நீ என்ன பெரிய தாதாவா? என்று கூறி அவரது கன்னத்தில் அறைந்தார். மேலும் ஏழு மலையை கீழே பிடித்து தள்ளினார். இதில் தடுமாறி விழுந்த ஏழுமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. 

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜும், சுரேசும் செய்வதறியாமல் திகைத்து போய் நின்றனர். பின்னர் சுதாரித்து கொண்டு ஏழுமலையை மீட்டு மோட்டார் சைக்கிளில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு ஏழுமலை மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ஏழுமலை பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சரவணன் விசாரணை நடத்தினார். பின்னர் கொலை வழக்காக பதிவு செய்து மோகன்ராஜ் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    ஓசூர் அருகே அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தச்சு தொழிலாளியை அண்ணன் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு போலீசில் சரணடைந்தார்.
    ஓசூர்:

    கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரி கோட்டை தெருவை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 31), கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய தம்பி நாகராஜ் (28). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரும் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    நாகராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் மது குடித்து விட்டு வந்து தனது அண்ணியிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இது குறித்து அவர் தனது கணவர் மாதப்பனிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர், நாகராஜை கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று நாகராஜ் மது குடித்து விட்டு மாதப்பனின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர் தனது அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் தனது கணவர் மாதப்பனிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மாதப்பன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நாகராஜை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து மாதப்பன் நடந்த சம்பவத்தை கூறி சூளகிரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக மாதப்பனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தச்சு தொழிலாளியை, அண்ணனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×