search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car Collide Near Madurai"

    மதுரையில் இன்று காலை இட்லி கடைக்குள் கார் புகுந்ததில் மூதாட்டி படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
    மதுரை:

    மதுரை மதிச்சியம் ராம ராயர் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரன். இவரது மனைவி சந்தானம் அம்மாள் (வயது 65). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டின் தெருமுனையில் இட்லி கடை நடத்தி வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் கடையில் சந்தானம் அம்மாள் வியாபாரம் செய்து வந்தார். கடை முன்பு நின்றிருந்த ஒரு கார் பின்நோக்கி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் இட்லி கடைக்குள் புகுந்தது. இதில் உள்ளே இருந்த சந்தானம் அம்மாள் கார் மோதி படுகாயம் அடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தானம் அம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செனாய் நகர் ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. பேச்சாளர் வைகை மூர்த்தி என்பவரின் பேரன் வெங்கடேசன் (18) என்பவர் புதிதாக கார் பழகி வந்துள்ளார். இவர் காரை பின்நோக்கி இயக்கியதில் விபத்து ஏற்பட்டு சந்தானம் அம்மாள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    போலீசார் வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×