search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old Woman Dead"

    • உடல் கருகிய மூதாட்டியை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை ராமாபுரம் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியம். ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி மூதாட்டி சூர்ய குமாரி (வயது80). இவர் நேற்று மாலை வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக தட்டில் இருந்த கற்பூரம் கை தவறி சூர்யகுமாரி சேலையில் விழுந்து திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி சூர்யகுமாரி உடல் முழுவதும் தீபற்றி எரிந்தது. இதனால் அவர் அலறி துடித்தார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பாலசுப்பிரமணியம் மற்றும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    இதில் உடல் கருகிய அவரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சூர்யகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி சூரியகுமாரியை காப்பாற்ற முயன்றதில் கணவர் பால சுப்பிரமணியம் லேசான தீக்காயம் அடைந்தார்.

    இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அமைத்த பந்தலில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • உமாராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்ன பள்ளி குப்பம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி ஜானகி (வயது 69). இதே பகுதியில் நேற்று இளம்பெண் ஒருவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதற்காக இரும்பு கம்பிகளை வைத்து பந்தல் அமைத்திருந்தனர். மேலும் மின்விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.

    விடிய விடிய மழை பெய்ததின் காரணமாக அலங்கார விளக்குகளுக்கு செல்லக்கூடிய ஒயரிலிருந்து மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பந்தல் அமைக்கப்பட்டுள்ள கம்பி வலியாக மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத ஜானகி இன்று காலை பந்தல் அருகே சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது இரும்பு கம்பியில் உரசினார். அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் அலறி துடித்தார்.

    அங்கு வந்திருந்த கடலூர் குள்ளஞ்சாவடி இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த ஸ்ரீதர் (30) என்பவர் ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றார். அவரும் படுகாயம் அடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே ஜானகி பரிதாபமாக இறந்தார். ஸ்ரீதருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து உமாராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அமைத்த பந்தலில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மதுரையில் இன்று காலை இட்லி கடைக்குள் கார் புகுந்ததில் மூதாட்டி படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
    மதுரை:

    மதுரை மதிச்சியம் ராம ராயர் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரன். இவரது மனைவி சந்தானம் அம்மாள் (வயது 65). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டின் தெருமுனையில் இட்லி கடை நடத்தி வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் கடையில் சந்தானம் அம்மாள் வியாபாரம் செய்து வந்தார். கடை முன்பு நின்றிருந்த ஒரு கார் பின்நோக்கி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் இட்லி கடைக்குள் புகுந்தது. இதில் உள்ளே இருந்த சந்தானம் அம்மாள் கார் மோதி படுகாயம் அடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தானம் அம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செனாய் நகர் ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. பேச்சாளர் வைகை மூர்த்தி என்பவரின் பேரன் வெங்கடேசன் (18) என்பவர் புதிதாக கார் பழகி வந்துள்ளார். இவர் காரை பின்நோக்கி இயக்கியதில் விபத்து ஏற்பட்டு சந்தானம் அம்மாள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    போலீசார் வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×