என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bus conductor"
ஈரோடு:
ஈரோடு கஸ்பா பேட்டை அசோகபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 37). தனியார் பஸ் கண்டக்டர்.
இவர் நேற்று ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார். பஸ்சில் அவரது பின்னால் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். நாச்சியார் தெருவில் சென்று கொண்டிருந்தபோது பிரபாகரன் பின்னால் நின்ற அந்த வாலிபர் திடீரென பிரபாகரன் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு ஓடினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் திருடன்... திருடன்... என கத்தினார். அந்த வழியாக வந்த பொதுமக்கள் செல்போனை பறித்து சென்ற வாலிபரை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை விசாரணைக்காக ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பிரபு (28) என்பதும் பெயிண்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருடப்பட்ட செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
கண்டக்டர் இல்லாமல் பஸ்சை இயக்குவதை கண்டித்தும். போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட கோரியும். போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரியும். கண்டக்டர் இட ஒதுக்கீட்டை தட்டி பறிக்க கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியறுத்தி வேலூர் ரங்காபுரத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகம் முன்பு போக்குவரத்து அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பரசுராமன், ராமதாஸ், மோகன்ராஜ் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்