search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy arrest in aruppukkottai"

    அருப்புக்கோட்டையில் வீடு புகுந்து திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அச்சிறுவன் விருதுநகரில் உள்ள இளஞ்சிறார் சிறையில் அடைக்கப்பட்டான்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் சரோஜினி. எம்.டி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர்களது வீடுகளில் கடந்த மாதம் ரூ.35 ஆயிரம் மற்றும் 2½ பவுன் நகை திருட்டுபோனது.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் செல்லப் பாண்டியன் வழக்குப் பதிவு செய்து அருப்புக்கோட்டையில் உள்ள வெள்ளக் கோட்டையைச் சேர்ந்த சந்துருபாண்டி (வயது17) என்பவனை கைது செய்தார்.

    பின்னர் அவன் விருதுநகரில் உள்ள இளஞ்சிறார் சிறையில் அடைக்கப்பட்டான்.
    ×