search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bjp demonstration"

    மின் கட்டண உயர்வை கண்டித்து தவளக்குப்பத்தில் உள்ள மின் துறை அலுவலகம் முன்பு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதுவை காங்கிரஸ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தவளக்குப்பத்தில் உள்ள மின் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாரதீய ஜனதா மாநில துணை தலைவர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சக்திபாலன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்க.விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர்.

    மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மணவெளி தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், மாவட்ட தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், பிரகாஷ், அணி நிர்வாகிகள் மகேஷ் ரெட்டி, கோபி, வடிவேலு, தினகரன், தொகுதி பொதுச் செயலாளர்கள் சுகுமாறன், கலைவாணன்,

    துணைத்தலைவர் சுரேஷ், விவசாய அணி பாரதி மோகன், வைரமுடி, திருவேங்கடம், சண்முகம், இளைஞர் அணி சிலம்பரசன், பிரபாகரன், மகளிர் அணி சுமதி, வள்ளி, வீரம்மாள், சாந்தி, செல்வி, ராஜேஸ்வரி, கவுசல்யா, பூரணாங்குப்பம் சண்முகம், எஸ்.சி., எஸ்.டி. மோர்சா திலீபன், வீரப்பன், தவளக்குப்பம் இளஞ்செழியன், மணவெளி தங்கதுரை, எடையார்பாளையம் அசோக் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பன்னாங்கொம்பு பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மணப்பாறை: 

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளர் செந்தில் தீபக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத் தலைவர் சித்தாநத்தம் சுப்பிரமணி வரவேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், மாவட்டத் தலைவர் மனோகர் ராஜன், கரூர் பாராளுமன்ற பொறுப்பாளர் பார்த்திபன், கோட்ட இணைப்பொறுப்பாளர் சிவசாமி, கோட்ட அமைப்புச் செயலாளர் பெரியசாமி, மாநில  செயற்குழு உறுப்பினர் சேது அரவிந்த் உள்ளிட்ட பலரும் கோரிக்கை குறித்து விளக்கிப்பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மதுரையில் இருந்து செல்லும் பேருந்துகள் பன்னாங்கொம்பில் நின்று செல்ல வேண்டும், காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி பள்ளிக்குழந்தைகளை அலைக்கழிக்காமல் அனைத்து பேருந்துகளிலும் ஏற்றிச் செல்ல வேண்டும், வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும், பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் குறித்து கண்டன கோசங்கள் எழுப்பினர். 

    முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் கலா துரை நன்றி கூறினார்.
    ×