search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Batlagundu"

    வத்தலக்குண்டுவில் மாணவியிடம் நகை பறித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகள் ஷாலினிதேவி. கல்லூரி மாணவி. இவர் நேற்று போடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.

    வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து திண்டுக்கல் பஸ்சில் ஏற முயன்றபோது 2 பெண்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினர். உடனே அங்கிருந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அகிலன் மற்றும் பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர்கள் தாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மனைவி செல்வி (30), கண்ணன் மனைவி முத்துமாரி (35) ஆகியோர் என தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 2 பெண்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×