search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Basic Facility"

    • தேவதானப்பட்டி தில்லையடி வல்லியம்மை நகரில் 1500 குடும்பங்கள் வாழ்நது வருகின்றனர்.
    • குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றித்தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி தில்லையடி வல்லியம்மை நகரில் 1500 குடும்பங்கள், விவசாய தினக்கூலி வேலை தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

    புல்லக்காபட்டி, தில்லையடி வல்லியம்மை நகர், பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 25 ஆண்டு காலமாக அடிப்படை தேவைகளான சாலை வசதி செய்து தராததால் சிறு மழை பெய்தால் கூட மழை வெள்ளம் தேங்கி குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.

    இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பதால் நோய்த்தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை குற்றம்சாட்டி வருகின்றனர். பொதுமக்கள் தொடர்ந்து பலமுறை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் நிலை இதேதான் என்றும் தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியில் என்ன பணிகள் நடைபெறுகிறது என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் திறந்து விடுவதாகவும் அதுவும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாவும் தெரிவிக்கின்றனர். எனவே குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து நிைறவேற்றித்தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட விசலூர், பனங்குடி ஆகிய பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட விசலூர், பனங்குடி ஆகிய பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் தினசரி குடிநீர் முறையாக கிடைக்கிறதா என கேட்டறிந்தார். பின்னர் நீர்முள்ளிநெடுஞ்சேரி உட்கிராமத்தில் தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா எனவும், குடியிருப்பு வீடுகளில் தனிநபர் கழிவறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா எனவும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பனங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மக்களின் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவையான இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைத்து தங்குதடையின்றி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், திருநாவுக்கரசு, தாசில்தார் பரஞ்ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
    ×