search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nannilam Area"

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட விசலூர், பனங்குடி ஆகிய பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட விசலூர், பனங்குடி ஆகிய பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் தினசரி குடிநீர் முறையாக கிடைக்கிறதா என கேட்டறிந்தார். பின்னர் நீர்முள்ளிநெடுஞ்சேரி உட்கிராமத்தில் தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா எனவும், குடியிருப்பு வீடுகளில் தனிநபர் கழிவறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா எனவும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பனங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மக்களின் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவையான இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைத்து தங்குதடையின்றி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், திருநாவுக்கரசு, தாசில்தார் பரஞ்ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
    ×