என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "collector nirmalraj"
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் புதுக்குடி, சேங்காலிபுரம்,வடவேர் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
குடவாசல் வட்டம் புதுக்குடி கிராமத்திற்குட்பட்ட நரசிங்கம்பேட்டை பகுதிகளில் தெருவிளக்குகள், குடிநீர் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா என்பது குறித்து மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், தினசரி குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுவது குறித்து கேட்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சேங்காலிபுரம் ஊராட்சி அக்ரகாரம் பகுதியில் பொதுமக்களிடம் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து தெருவிளக்குகள், தினசரி குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளியில் மதிய உணவினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தன கோபால கிருஷ்ணன், பொற்செல்வி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட விசலூர், பனங்குடி ஆகிய பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் தினசரி குடிநீர் முறையாக கிடைக்கிறதா என கேட்டறிந்தார். பின்னர் நீர்முள்ளிநெடுஞ்சேரி உட்கிராமத்தில் தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா எனவும், குடியிருப்பு வீடுகளில் தனிநபர் கழிவறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா எனவும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பனங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மக்களின் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவையான இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைத்து தங்குதடையின்றி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், திருநாவுக்கரசு, தாசில்தார் பரஞ்ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய சுகாதார இயக்கம், தமிழ்நாடு சுகாதார திட்டம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் வழங்கப்பட்ட இலவச தாய், சேய் வாகன சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, வாகன சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் இலவச தாய், சேய் வாகன சேவையானது, திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமான திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு இலவச தாய், சேய் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சேவை வாகனம் மூலம் அரசு தாய், சேய் மருத்துவமனைகளில் பிரசவித்த தாய் மற்றும் குழந்தையை அவர்களது இல்லத்திற்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகிறது. அதன் பின்னர் ஒரு ஆண்டிற்கு தடுப்பூசிக்காகவும், குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுகிறது. இந்த சேவை பயன்படுத்தி கொள்ள இலவச தொலைபேசி 102 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செந்தில் குமார், இந்திய செஞ்சிலுவை சங்க திருவாரூர் மாவட்ட கிளை தலைவர் ராஜ்குமார், செயலாளர் வரதராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்