என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![திருவாரூரில் இலவச தாய், சேய் வாகன சேவை: கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார் திருவாரூரில் இலவச தாய், சேய் வாகன சேவை: கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்](https://img.maalaimalar.com/Articles/2018/May/201805232203141381_Collector-Nirmalraj-launched-the-Free-Mother-and-Baby_SECVPF.gif)
X
திருவாரூரில் இலவச தாய், சேய் வாகன சேவை: கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்
By
மாலை மலர்23 May 2018 4:33 PM GMT (Updated: 23 May 2018 4:33 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருவாரூரில் இலவச தாய், சேய் வாகன சேவை கலெக்டர் நிர்மல்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய சுகாதார இயக்கம், தமிழ்நாடு சுகாதார திட்டம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் வழங்கப்பட்ட இலவச தாய், சேய் வாகன சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, வாகன சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் இலவச தாய், சேய் வாகன சேவையானது, திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமான திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு இலவச தாய், சேய் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சேவை வாகனம் மூலம் அரசு தாய், சேய் மருத்துவமனைகளில் பிரசவித்த தாய் மற்றும் குழந்தையை அவர்களது இல்லத்திற்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகிறது. அதன் பின்னர் ஒரு ஆண்டிற்கு தடுப்பூசிக்காகவும், குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுகிறது. இந்த சேவை பயன்படுத்தி கொள்ள இலவச தொலைபேசி 102 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செந்தில் குமார், இந்திய செஞ்சிலுவை சங்க திருவாரூர் மாவட்ட கிளை தலைவர் ராஜ்குமார், செயலாளர் வரதராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய சுகாதார இயக்கம், தமிழ்நாடு சுகாதார திட்டம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் வழங்கப்பட்ட இலவச தாய், சேய் வாகன சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, வாகன சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் இலவச தாய், சேய் வாகன சேவையானது, திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமான திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு இலவச தாய், சேய் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சேவை வாகனம் மூலம் அரசு தாய், சேய் மருத்துவமனைகளில் பிரசவித்த தாய் மற்றும் குழந்தையை அவர்களது இல்லத்திற்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகிறது. அதன் பின்னர் ஒரு ஆண்டிற்கு தடுப்பூசிக்காகவும், குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுகிறது. இந்த சேவை பயன்படுத்தி கொள்ள இலவச தொலைபேசி 102 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செந்தில் குமார், இந்திய செஞ்சிலுவை சங்க திருவாரூர் மாவட்ட கிளை தலைவர் ராஜ்குமார், செயலாளர் வரதராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)