என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் அருகே அரசு பள்ளியில் யோகா பயிற்சி: கலெக்டர் நிர்மல்ராஜ் பங்கேற்பு
Byமாலை மலர்22 Jun 2018 4:52 PM GMT (Updated: 22 Jun 2018 5:28 PM GMT)
சர்வதேச யோகா தினத்தையொட்டி திருவாரூர் அருகே அரசு பள்ளியில் நடந்த யோகா பயிற்சியில் கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார்.
திருவாரூர்:
சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி திருவாரூர் அருகே விளமலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடந்தது. இதில் கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார். இதில் யோகா பயிற்றுனர் பல்வேறு ஆசனங்கள் செய்து காண்பித்தார். அதனை பின்பற்றி கலெக்டர் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் யோகா செய்தனர். இதுகுறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் கூறுகையில்,
யோகா பயிற்சி மேற்கொள்வதால் ஞாபக சக்தி, ரத்த ஓட்டம், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் சிறப்பாக செயல்படும். மேலும் உடல் நலம், மன வளம் மேன்மை அடையும். எனவே அனைத்து தரப்பு மக்களும் யோகாவினால் பல பயன்கள் பெறமுடியும் என்பதால் தினந்தோறும் யோகா செய்ய வேண்டும் என கூறினார். இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி நடைபெற்றது.
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, பின்லே மேல்நிலைப்பள்ளி, அரசினர் கலைக்கல்லூரி ஆகியவற்றின் தேசிய மாணவர் படை சார்பில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடந்தது. இதில் 150 தேசிய மாணவர் படை வீரர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இதில் தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். யோகா பயிற்சி முறை குறித்த கையேடுகளை சுபைதார் ஜெயசீலன் மாணவர்களுக்கு வழங்கினார். முன்னதாக பின்லே தேசிய மாணவர் படை அதிகாரி டேனியல் ராஜாஜி வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அதிகாரி திவாகர் செய்து இருந்தார். முடிவில் அரசினர் கலைக்கல்லூரி என்.சி.சி. அதிகாரி ராஜன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X