search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby kidnap"

    • கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தங்களது 8 மாத ஆண் குழந்தையுடன் கடந்த 12-ந்தேதி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார்.

    மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்று சிகிச்சை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது புதிய பஸ் நிலையத்தில் கழிவறைக்குச் சென்ற அவர் குழந்தையை முன்புறம் இருந்த இருக்கை ஒன்றில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளார்.

    திரும்பி வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. யாரோ மர்மநபர் குழந்தையை அங்கிருந்து கடத்தி சென்று விட்டது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி தனது கணவர் வெங்கடேசனுக்கு தெரிவித்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த யூனிஸ், திவ்யபாரதி தம்பதியின் குழந்தை கடத்தப்பட்டது.
    • குழந்தையை காணாததால் திவ்யபாரதி கதறி அழுதது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ்.கூலித்தொழிலாளி. இவரது மனைவி திவ்யபாரதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கடந்த 27-ம் தேதி திவ்யபாரதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை கணவர் யூனிஸ் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு 29-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து திவ்யபாரதி தனது குழந்தையுடன் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தார். உதவிக்காக அவரது கணவரும் உடன் தங்கி இருந்தார்.

    நேற்று முன்தினம் இரவு திவ்யபாரதி மற்றும் அவரது கணவர் சாப்பிட்டு விட்டு குழந்தையின் அருகே தூங்கினர். நேற்று அதிகாலை திவ்யபாரதி எழுந்து குழந்தை படுத்திருந்த தொட்டிலை பார்த்தார். அப்போது தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் தனது கணவரை எழுப்பி தகவல் தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் தங்களது குழந்தையை தேடி அலைந்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இவர்கள் தூங்கிய நேரத்தில் வார்டுக்குள் புகுந்த யாரோ மர்ம நபர்கள் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். குழந்தையை காணாததால் திவ்யபாரதி கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பொள்ளாச்சி போலீசில் புகார் கொடுத்தனர். உடனடியாக போலீசார் மருத்துவமனை வந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் பணியில் இருந்த நர்சுகளிடம் விசாரணை மேற்கொண்டனர். 6 தனிப்படைகளை அமைத்து குழந்தையை தேடி வந்தனர்.

    இந்நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் பெண் ஒருவரை கேரளாவில் கைது செய்தனர்.

    மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×