search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Drivers Demonstration"

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உச்சத்தை எட்டி உள்ளது.

    டீசல் விலை ரூ.70-க்கு மேலும், பெட்ரோல் விலை ரூ.80-க்கு மேலும் அதிகரித்துள்ளது. கியாஸ் சிலிண்டர் விலை ரூ.35 அதிகரித்துள்ளது.

    இதை கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெறக்கோரியும் புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    காந்திவீதி அமுதசுரபி எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் மது தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சீனுவாசன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டும், எலும்புக்கூடு போல வே‌ஷம் அணிந்தும் போராட்டம் நடத்தினர்.

    ×