search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM Centre fire accident"

    கோவை சிங்காநல்லூர் அருகே இன்று அதிகாலை ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 எந்திரங்கள் எரிந்து சேதமடைந்தது.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அம்பாள் தியேட்டர் எதிர் புறம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இதில் பணம் எடுப்பதற்காக 3 ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. இன்று அதிகாலை 2.15 மணி அளவில் இம்மையத்தில் இருந்து பெரும் புகை வந்தது.

    அவ்வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதற்குள் ஏ.டி.எம். மையம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    சம்பவஇடத்துக்கு பீளமேடு நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். சிங்காநல்லூர் போலீசாரும் அங்கு சென்று விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். மையத்தில் இருந்த ஏ.சி. மி‌ஷன் மற்றும் யு.பி.எஸ். எந்திரங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் நிறுவன ஊழியர்கள் வந்து சோதனை செய்தனர்.

    இதில் ஏ.டி.எம். எந்திரங்களின் மானிட்டர் பகுதி மட்டுமே எரிந்தது தெரிய வந்தது. எனினும் இன்று எந்திரத்தை திறந்து பார்க்கும் போது தான் பணம் எரிந்துள்ளதா? என்ற விவரங்கள் முழுமையாக தெரிய வரும் என தெரிவித்தனர்.
    ×