search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Games 2023"

    • வில்வித்தை பெண்கள் ரிகர்வ் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.
    • இதுவரை இந்தியா 34 வெண்கலம் வென்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    வில்வித்தையில் பெண்கள் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத், பஜன்கவுர் மற்றும் சிம்ரன்ஜித் கவுர் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    இந்திய அணி இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 97 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார். கெயிக்வாட், திலக் வர்மா ஜோடி அதிரடியாக ஆடியது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். திலக் வர்மா 55 ரன்னும், கெயிக்வாட் 40 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் இந்தியா 97 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றது.

    • பெண்கள் கபடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற பெண்கள் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி நேபாளத்தை எதிர்கொண்டது.

    இதில் இந்திய அணி 61-17 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அல்லது சீன தைபே அணியுடன் மோத உள்ளது.

    • ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
    • இந்திய அணி இதுவரை 20 தங்கம் வென்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சந்து ஜோடி, மலேசியா ஜோடியை 2-0 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

    இதுவரை இந்திய அணி 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • ஆண்கள் கபடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • நாளை நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆண்கள் கபடி போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்கொண்டது.

    இதில் இந்திய அணி 50-27 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    • வில்வித்தையில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
    • இந்திய அணி இதுவரை 19 தங்கம் வென்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம், அதிதி கோபிசந்த் ஸ்வாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய அணி சீன தைபேயுடன் மோதியது.

    இதில் இந்திய அணி 230-228 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.

    இதுவரை இந்திய அணி 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 82 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் காலிறுதி போட்டி நடைபெற்றது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு தொடரில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது.

    இந்தியாவின் பி.வி.சிந்துவும், சீனாவின் ஹி பிங்ஜியோவும் மோதினர்.

    இதில் பி.வி.சிந்து 16-21, 12-21 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் போட்டி தொடரில் இருந்தும் பி.வி.சிந்து வெளியேறினார்.

    • குத்துச்சண்டையில் ஏற்கனவே இந்தியா வெண்கலம் வென்றுள்ளது.
    • இந்திய அணி இதுவரை 27 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெயின், சீனாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இதுவரை இந்திய அணி 16 தங்கம், 27 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இந்திய அணி இன்று 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்குவாஷ் மற்றும் குத்துச்சண்டையில் இந்தியா வெண்கலம் வென்றது.
    • இந்திய அணி இதுவரை 31 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, சீனா தைபே வீராங்கனையிடம் தோற்று வெண்கலம் வென்றார்.

    இதுவரை இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 73 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • ஸ்குவாஷ் கலப்பு இரட்டையரில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
    • இந்திய அணி இதுவரை 30 வெண்கலம் வென்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அனாகத் சிங், அபய் சிங் ஜோடி 2-1 என்ற கணக்கில் மலேசியா அணியிடம் தோற்றது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.

    இதுவரை இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • வில்வித்தை கலப்பு இரட்டையரில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
    • இந்திய அணி இதுவரை 16 தங்கம் வென்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

    ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஆகியோர் 159-158 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவை வீழ்த்தினர்.

    இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 35 கிலோமீட்டர் நடை ஓட்டம் கலப்பு அணியில் இந்திய அணி வெண்கலம் வென்றது.
    • சீனா தங்கமும், ஜப்பான் வெள்ளியும் வென்றது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 35 கிலோமீட்டர் நடை ஓட்டம் கலப்பு அணியில் இந்தியாவின் ராம் பாபு, மஞ்சுராணி ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

    சீனா தங்கமும், ஜப்பான் வெள்ளியும் வென்றது.

    இந்திய அணி இதுவரை 15 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ×