search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambur youth suicide"

    ஆம்பூரில் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் இருக்கும் ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று மதியம் ஒரு வாலிபர் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி இறந்து கிடந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில், இறந்த வாலிபர், வாணியம்பாடி கிரிசமுத்திரத்தை சேர்ந்த பெருமாள் மகன் சசிக்குமார் (வயது 21) என்பது தெரிய வந்தது. சசிக்குமார் தனியார் செல்போன் டவர் அமைக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் தந்தையுடன் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு வெளியேறினார். ஆம்பூர் வந்த சசிக்குமார், பள்ளி அருகே பைக்கை நிறுத்தி விட்டு தண்டவாளத்திற்கு சென்று ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×