search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "action against teachers"

    அரியானா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் அனைத்தும் மாணவர்களும் தோல்வியடைந்தை அடுத்து ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் உள்ள தீகோட் அரசு பள்ளியில் 51 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த தேர்வை எழுதிய 51 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளியை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து பல்வால் மாவட்ட கல்வி அதிகாரி சுமன் நைன் கூறுகையில், அரசு பள்ளியில் மாணவர்களின் மோசமான மதிப்பெண்கள் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×