search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aamir Khan"

    பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானும், டோலிவுட் நடிகர் பிரபாஸும் ரூ.1000 கோடியில் உருவாகும் சரித்திர கதையில் நடிக்க இருக்கிறார்கள். #AamirKhan #Prabhas
    பாகுபலி வெற்றிக்கு பிறகு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்வை புராண, இதிகாச, சரித்திர கதைகள் பக்கம் திரும்பி இருக்கிறது. ராமாயண கதையை மையமாக வைத்து பாலகிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் ஏற்கனவே ஸ்ரீராமராஜ்ஜியம் படம் தமிழ், தெலுங்கில் வந்தது. 

    நாகார்ஜுனா, அனுஷ்கா நடிப்பில் ஓம் நமோ வெங்கடேசாய என்ற பெயரில் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவிளையாடல்களை சித்தரித்து பக்தி படம் வெளியானது. சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பத்மாவத் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலில் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சாதனை படைத்தது.

    ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையும் படமாகி வருகிறது. இதில் லட்சுமிபாயாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். தெலுங்கில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் சைரா நரசிம்ம ரெட்டி என்ற சரித்திர படம் தயாராகிறது.

    இந்த நிலையில் மகாபாரதம் கதையையும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் படமாக எடுக்கின்றனர். ரூ.1000 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. இதில் கர்ணன், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், சகுனி, திரவுபதி உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களுக்கு நடிகர்–நடிகைகள் தேர்வு நடக்கிறது. 

    அமீர்கானை முக்கிய கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். அர்ஜுனன் வேடத்தில் நடிக்க பாகுபலி படம் மூலம் பிரபலமான பிரபாஸிடம் பேசி வருகிறார்கள்.
    தனது 30 ஆண்டுகள் சினிமா பயணத்தை நிறைவு செய்த அமீர்கான், தனது முதல் படமான ’கயாமாத் சே கயாமத் டக்’ படக்குழுவினருடன், டாக்ஸி ஓட்டுநர்களையும் அழைத்து சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். #AamirKhan
    இந்தி திரையுலகில் அமீர்கான் மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் கொண்ட நடிகர். இவர், இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவர்ந்தவர்.

    இந்நிலையில், நடிகர் அமீர்கான் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி அவரது முதல் படமான  ‘கயாமாத் சே கயாமத் டக்’ திரைப்படத்தை மீண்டும் திரையிடும் நிகழ்ச்சி படக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் அமீர்கான், நிகழ்ச்சிக்கு டாக்ஸி ஓட்டுநர்களையும் அழைத்திருந்தார்.



    அவரது முதல் படத்தின் வெற்றிக்கு டாக்ஸி ஓட்டுநர்களின் பங்கு முக்கியமானது என்பதை நினைவு கூர்ந்தே அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுடன் உரையாடிய அமீர்கான், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். அமீர்கானின் இந்த செயலால் அவரது ரசிகர்கள் மனதில் மீண்டும் நீங்கா இடம் பிடித்துள்ளார். #Aamir Khan
    ×