search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Killed"

    • கடலூர் அருகே கார் மோதி 2 பெண்கள் பலியானர்கள்.
    • காரை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியபட்டு பகுதியில் இன்று மதியம் கலிபாமேரி உள்பட 5 பேர் சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் கலிபாமேரி, தேவதர்ஷினி ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

    • 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து அதனை யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவி மறைத்தனர்.
    • பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு பூபதி பிரசவம் பார்த்துள்ளார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பார்வதி (வயது 30). இவர் முதல் கணவரை பிரிந்து ராசிபுரம் புதுப்பட்டியை சேர்ந்த பூபதி (25) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி 2 பேரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.

    இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் பார்வதிக்கு முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே பார்வதி மீண்டும் கர்ப்பமானார்.

    ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து அதனை யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவி மறைத்தனர். நேற்று முன்தினம் மதியம் அவர்கள் 2 பேரும் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கோட்டைகரடு பகுதிக்கு வந்தனர்.

    அப்போது பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு பூபதி பிரசவம் பார்த்துள்ளார். அப்போது பெண் குழந்தை இறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் அந்த பகுதியில் குழி தோண்டி குழந்தையின் உடலை புதைத்தனர். இதனிடையே சிறிது நேரத்தில் மயங்கிய பார்வதி, அங்கேயே பலியானார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து மல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் குழந்தை மற்றும் பார்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து மனைவியை பிரசவத்திற்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் பொதுவெளியில் மருத்துவ விதிமுறைகளை மீறி பிரசவம் பார்த்தது மற்றும் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது பற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் புதைத்தது போன்ற குற்றத்திற்காக பூபதியை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் போலீசார், அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    தாய் இறந்த நிலையில், தந்தையை போலீஸ் கைது செய்துள்ளதால் அவர்களது குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    சாயல்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார்.
    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள சிக்கல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஓடைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காஞ்சி. இவரது மனைவி அங்கம்மாள் (வயது 68). அதே பகுதியைச் சேர்ந்த வர்கள் செல்வராஜ் மனைவி ராமாயி (43), முருகவேல் மனைவி சண்முக வள்ளி (55).

    இவர்கள் 3 பேரும் தினமும் அதிகாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தலாக்கல் கண்மாய் கரையில் தண்ணீர் பிடிக்கச் செல்வது வழக்கம்.

    இன்று அதிகாலை 3 பேரும் வழக்கம் போல் அங்கு தண்ணீர் பிடித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் 3 பேர் மீதும் பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இந்த விபத்தில் அங்கம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமாயி, சண்முகவள்ளி ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

    இதைப்பார்த்த அந்தப்பகுதியினர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராமாயி பரிதாபமாக இறந்தார். சண்முகவள்ளி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக் டர் முகமது நசீர், சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மாவட்டத்தில் நிச்சயிக்கப்பட பெண் வேறு ஒருவருடன் போனில் பேசியதை கேட்ட வாலிபர் கோபத்தில் அடித்த கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #rajasthanwomen
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் துங்காபூர் மாவட்டத்தில் உள்ளா பந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ். இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நேற்று இரவு நிஷாவின் வீட்டிற்கு ஹரிஷ் சென்றார். அப்போது நிஷா போனில் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். யாருடன் பேசி கொண்டிருந்தாய்? என கேட்டதற்கு நிஷா சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹரிஷ் போனை கேட்டதற்கு அவர் தர மறுத்தார்.

    இதையடுத்து, ஹரிஷ் கோபத்தில் நிஷாவை பயங்கரமாக தாக்கினார். அதனை தடுக்க வந்த நிஷாவின் தாயாரையும் ஹரிஷ் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    நிஷா உடலில் ஏற்பட்ட உள் காயங்களினால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஷை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகத்தினால் இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #rajasthanwomen

    ×