search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viv Richards"

    ரிச்சர்ட்ஸ், இம்ரான் கானை விராட் கோலி நினைவுப்படுத்துகிறார் என இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். #ViratKohli #RaviShastri
    வெல்லிங்டன்:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஜொலிக்கிறார்.

    கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவர் பெற்றுள்ளார். சிறந்த வீரர், டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டி வீரர் என 3 ஐ.சி.சி. விருதுக்கு தேர்வான உலகின் முதல் வீரர் என்ற சாதனையை விராட்கோலி பெற்றார்.

    இந்த நிலையில் விராட் கோலிக்கு இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். ரிச்சர்ட்ஸ், இம்ரான் கானை அவர் நினைவுப்படுத்துகிறார் என்று பாராட்டியுள்ளார்.

    நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை அருகாமையில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். விராட்கோலி ஒரு அடையாளம். முற்றிலும் மாறுபட்ட வீரர். அவரது தலைமை வேண்டும். அவரைப் போல் உழைக்க யாரும் இல்லை.

    பயிற்சி பெற வருவது, ஒழுக்கம், தியாகம், தனிப்பட்ட விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் அவருக்கு நிகர் இல்லை. இப்படி ஒரு கேப்டனை பெற்றது இந்தியாவின் அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன்.

    விராட் கோலி பல வழிகளில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கானை நினைவுப்படுத்துகிறார். அவர் தனது சொந்த வழியில் அணியை முன்னெடுத்து தலைமை தாங்குகிறார்.

    பேட்டிங்கில் அவர் வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் ரிச்சர்ட்சை நினைவுப்படுத்துகிறார். நான் பார்த்ததில் கோலி பலமடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    அவர் மேலும் மேலும் நன்றாக வளர்ந்து கொண்டு இருக்கிறார். உதாரணத்துக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை அவர் வென்றதை குறிப்பிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விராட்கோலி கடந்த ஆண்டு 13 டெஸ்டில் 1322 ரன் எடுத்தார். சராசரி 55.08 ஆகும். 5 செஞ்சுரியும் அடித்து இருந்தார். 14 ஒருநாள் போட்டியில் 6 சதத்துடன் 1,202 ரன் எடுத்தார். சராசரி 133.55 ஆகும்.

    ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி கனவு அணிக்கு அவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ViratKohli #RaviShastri
    விராட் கோலி கவுன்ட்டி போட்டியில் விளையாடாதது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, மனதளவில் வலிமையானவர் என்று விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். #ViratKohli
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இந்தியா ஜூன் மாதம் கடைசியில் இங்கிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. குறிப்பாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக, கவுன்ட்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார்.

    சர்ரே அணியுடன் விராட் கோலி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில் அவருடைய கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    விராட் கோலி கவுன்ட்டி போட்டியில் இருந்த விலகியது அவரது ஆட்டத்தை பாதிக்காது என்று கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.



    விராட் கோலி குறித்து விவ் ரிச்சர்ட்ஸ் கூறுகையில் ‘‘விராட் கோலி கவுன்ட்டி போட்டியில் விளையாடுவதை பார்க்க நான் மிகவும் ஆசைப்பட்டேன். கவுன்ட்டி போட்டியில் விளையாடு வேண்டும் என்று விராட் கோலி எடுத்த முடிவு நல்ல முடிவு.

    ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக அவரால் விளையாட முடியாமல் போனது. மனதளவில் விராட் கோலி வலிமையானவர். அதனால் இங்கிலாந்து தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார்’’ என்றார்.
    ×