search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tuticorin Port"

    • மிகப் பெரிய கப்பல்களை கையாளும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன.
    • பொருளாதார வளர்ச்சிக்கு பயனுடையதாக அமையும் என தகவல்

    தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஒன்பதாவது சரக்கு தளம், சரக்கு பெட்டக தளம், கப்பல் நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மிகப் பெரிய அளவிலான கப்பல்களை கையாளும் வகையில் துறைமுகத்தில் மிதவையானம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி துறைமுகத்தை சரக்கு பெட்டக மையமாக மாற்றும் வகையில், தொலைநோக்கு அடிப்படையில் இந்த வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம். அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இந்த பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு துறைமுகத்தில் நேரில் விளக்கம் அளிக்கப்பட்டது.


    அப்போது பேசிய அவர், இதன் மூலம் இலங்கை துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களில் பெரும்பாலானவை தூத்துக்குடிக்கு துறைமுகத்திறகு வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    • கொரோனாவுக்குப்பின் கொழும்பு துறைமுக செயல்பாடுகள் மந்தமாகியுள்ளன.
    • திருப்பூரிலிருந்து 70 சதவீத பின்னலாடைகள், சென்னை துறைமுகம் வாயிலாகவே அனுப்ப வேண்டியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், பின்னலாடை ரகங்களை வெளிநாடுகளுக்கு கடல் வழியே ஏற்றுமதி செய்கின்றன. இதற்கு தூத்துக்குடி மற்றும் கொச்சி துறைமுகங்களையே திருப்பூர் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தி வந்தன.தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பப்படும் சரக்குகள், சிறிய கப்பல்களில் (பீடர் வெசல்) ஏற்றப்பட்டு, கொழும்பு சென்று அங்கு பெரிய கப்பலுக்கு (மதர் வெசல்) மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

    கொரோனாவுக்குப்பின் கொழும்பு துறைமுக செயல்பாடுகள் மந்தமாகியுள்ளன. இதனால் சரக்குகள் வெளிநாடுகளை சென்றடைய தாமதமாகிறது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பும் சரக்குகள், கொழும்புவை அடைந்து பெரிய கப்பல்களில் ஏற்றப்படுவதற்கு இரண்டு வாரத்துக்கு மேலாகிறது. சீசனுக்காக தயாரிக்கப்படும் ஆடைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வெளிநாட்டைச் சென்றடைவது அவசியம். தாமதத்தை வெளிநாட்டு வர்த்தகர்கள் விரும்புவதில்லை.திருப்பூரின் 90 சதவீத சரக்கு போக்குவரத்துக்கு கைகொடுத்துவந்த தூத்துக்குடி துறைமுகத்தை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சென்னையில் போதுமான சரக்கு ஏற்றப்பட்டால் பல பெரிய கப்பல்கள் கொச்சி துறைமுகத்தை புறக்கணித்து விடுகின்றன. திருப்பூரிலிருந்து 250 கி.மீ., தூரத்தில் கொச்சி, 330 கி.மீ.,ல் தூத்துக்குடி துறைமுகங்கள் இருந்தாலும், இந்த துறைமுகங்களை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

    விரைவில் சரக்கை அனுப்ப 500 கி.மீ., தொலைவில் உள்ள சென்னை துறைமுகத்தை நாட வேண்டியுள்ளது. செலவும் அதிகரிக்கிறது.திருப்பூரிலிருந்து 70 சதவீத பின்னலாடைகள், சென்னை துறைமுகம் வாயிலாகவே அனுப்ப வேண்டியுள்ளது. தூத்துக்குடி துறைமுக அதிகாரிகளின் அலட்சியமும், தொலைநோக்கு பார்வையில்லாததும், தமிழக ஏற்றுமதி, இறக்குமதியாளர்களை பாதிக்க செய்கிறது.எனவே, துறைமுக கடல் பகுதியை ஆழப்படுத்தி, தூத்துக்குடிக்கு பெரிய கப்பல்கள் நேரடியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பு துறைமுக சார்பு நிலை தொடர்ந்தால், தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடியில் இன்று போலீசார் நடத்தி சோதனையில் பல லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர். #TuticorinPort
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துறைமுகத்திற்கு தினமும் பல்வேறு நாடுகளில் இருந்து சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி ஆகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் சிலர் வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை வஸ்துக்கள் உள்ளிட்டவற்றை கடத்தி வந்துவிடுவதாக போலீசருக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து போலீசார் மற்றும் உளவுப்பிரிவினர், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள்.

    இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்

    அப்போது, மேட்டுப்பட்டியை சேர்ந்த வ.உ.சி. துறைமுக ஊழியரான அப்துல்காதர் ஜெய்லானி(வயது 40) என்பவர் வீட்டின் முன்பகுதியில் உள்ள குடிசைக்குள் 400 பண்டல் வெளிநாட்டு சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதே போன்று 11 வெளிநாட்டு மதுபாட்டில்களும் இருந்தன. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது.

    உடனடியாக போலீசார் அப்துல்காதர் ஜெய்லானியை கைது செய்தனர். அவரிடம் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தூத்துக்குடியில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி 9 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    தூத்துக்குடி மணல் தெருவை சேர்ந்தவர் ஜெரீசன்(வயது 50). கூலி தொழிலாளி. இவர் போதை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் போதை தடுப்பு சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு ஜெரீசன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அவரது வீட்டில் 9 கிலோ போதை பேஸ்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் ஜெரீசனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்பேரில் இதில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதையடுத்து ஜெரீசன் வீட்டில் இருந்த 9 கிலோ போதை பொருளையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பும் பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, தாளமுத்து நகர், வடபாகம், திரேஸ்புரம், மட்டக்கடை, தென்பாகம் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக அதிக அவில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தினமும் போலீசார் வழக்குப்பதிவு செய்த வருகின்றனர். எனினும் கஞ்சா விற்பனையை போலீசாரால் தடுக்க முடியவில்லை.

    இதனால் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகின்றனர். இதையடுத்து அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுத்து வேண்டும் என்றனர். இதனிடையே பொதுமக்கள், தங்கள் குடியிருப்பு அருகே கஞ்சா, லாட்டரி சீட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் இருந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். #TuticorinPort
    ×