search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srilankan bomb blast"

    இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் பட்டியலில் தவறுதலாக அமெரிக்க பெண் எழுத்தாளர் படம் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    கொழும்பு:

    கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகப்படும் பயங்கரவாதிகள் 6 பேரின் படங்களை இலங்கை நாட்டு காவல் துறை வெளியிட்டது.

    பயங்கரவாதிகள் பட்டியலில் அப்துல் காதர் பாத்திமா கதியா என்ற பெண்ணின் பெயரும் படமும் இடம்பெற்று இருந்தது. இந்த படத்தில் இருப்பவர் அமெரிக்காவை சேர்ந்த பெண் எழுத்தாளர் என்றும் தவறுதலாக வெளியிடப்பட்டு இருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

    காவல்துறை வெளியிட்ட புகைப்படத்தில் இருப்பவர் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் வசிக்கும் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அமாரா மஜீத் ஆவார். இலங்கை வெளியிட்ட படத்தால் அதிர்ச்சி அடைந்த அமாரா, தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவிட்டிருந்தார்.

    அமாரா இதுபற்றி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    ‘அனைவருக்கும் வணக்கம், ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான் தவறாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். இது முற்றிலும் தவறானது. இஸ்லாம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஏற்கனவே கண்காணிப்பு சிக்கல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனக்கு இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் அவசியம் இல்லை.

    இந்தக் கொடூரமான தாக்குதலுடன் என்னைத் தொடர்புப்படுத்துவதை நிறுத்துங்கள். அடுத்த முறையாவது இதுபோன்ற தகவல்களை வெளியிடும்போது கவனமாக இருங்கள். நீங்கள் வெளியிடும் தகவல்கள், ஒரு குடும்பத்தையும் ஒரு சமூகத்தையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும்.’

    இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து இலங்கை காவல்துறைக்கு கண்டனங்கள் எழுந்தன. தற்போது இலங்கை காவல் துறை தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இலங்கை காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் அப்துல் காதர் பாத்திமா காதியா என்ற பெண் தேடப்படும் நபராக உள்ளார். அவரது புகைப்படம் என கூறி வெளியிடப்பட்ட படம் தவறானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    கொழும்பு:

    இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


    இதுபற்றி இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு:-

    வங்காளதேசம்- 1
    சீனா-2
    இந்தியா - 11
    டென்மார்க் - 3
    ஜப்பான் -1
    நெதர்லாந்து- 1
    போர்ச்சுகல்- 1
    சவுதி அரேபியா - 2
    ஸ்பெயின் -1
    துருக்கி -2
    இங்கிலாந்து- 6
    அமெரிக்கா -1

    அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேர், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேர் என 36 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

    இதுவரை 14 வெளிநாட்டவர்களை பற்றிய விவரம் தெரியவரவில்லை. 12 வெளிநாட்டினர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் கொழும்பு நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    இலங்கையின் கொழும்பு அருகே உள்ள புகோடா நகரில் குப்பையில் கிடந்த பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். #SriLankaAttacks #SriLankaBlast
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் என 359 பேர் பலியாகினர். இதேபோல் மேலும் தாக்குதல்களை நடத்துவதற்காக வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பிற பகுதிகளிலும் சந்தேகத்திற்கிடமான நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொழும்பு புறநகரான புகோடா நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு பின்பகுதியில் உள்ள காலி நிலத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.



    அங்குள்ள குப்பை பகுதியில் கிடந்த வெடிகுண்டு வெடித்திருக்கலம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர். #SriLankaAttacks #SriLankaBlast
    ×