search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sports Ministry"

    • அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்துச் செய்துள்ளது.
    • கேரளா, மோகன் பகான் அணிகள் வெளிநாடுகளில் விளையாட உள்ளன.

    அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததை காரணம் காட்டி அதன் உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா தற்காலிகமாக ரத்துச் செய்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் இந்திய அணி விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம் செய்வதற்கு முன்னதாக கேரளா எப்சி அணி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்துள்ளது. ஈரானைச் சேர்ந்த ஒரு அணியுடனும், மற்றொரு அணியுடனும் வரும் 23, 26 ஆகிய தேதிகளில் விளையாடவுள்ளது. இதே போல ஏடிகே மோகன் பஹான் அணி செப்டம்பர் 7-ந் தேதி பஹ்ரைனில் ஆசிய கால்பந்து சம்மேளன போட்டியில் விளையாடவுள்ளது.

    இந்த விவரத்தை சுட்டிக்காட்டி, இந்த அணிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி விளையாட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

    மேலும் உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய அணிக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    தெற்கு ஆசிய போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் வீரர் ஏழ்மையில் வாடுவதால் மத்திய அமைச்சகம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளது.
    ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெத்பூரைச் சேர்ந்தவர் அஷோக் சோரேன். இவர் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தெற்கு ஆசிய போட்டியில் வில்வித்தை பிரிவில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றார். இவர் தற்போது பணமில்லாமல் மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கூலித் தொழில் செய்து வருகிறார்.



    இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்வர்தன் ரத்தோர் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான பண்டித் தீன்தயாள் உபத்யாய் தேசிய நல நிதி திட்டத்தின் கீழ் இந்த பணம் வழங்கப்படும்.
    சர்வதேச அளவில் சாதனைப் படைத்து பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பென்சன் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
    இந்தியா சார்பில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கம் வெல்வது உண்டு. பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநிலம், இந்திய அரசு ஊக்கத்தொகை வழங்கி மகிழ்விக்கும்.

    வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஓய்வு பெற்றபின் அவர்களுக்கு ஓய்வு ஊதியமும் வழங்கப்படும். தற்போது அந்த ஓய்வூதியம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பென்சனாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள பென்சன் கொள்கையின்படி 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பாராலிம்பிக்ஸில் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் இதே தொகை வழங்கப்படும்.



    உலகக்கோப்பை, ஆசிய போட்டியில் தங்கம் வெல்லும் நபர்களுக்கு 16 ஆயிரம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்லும் நபர்களுக்கு 14 ஆயிரம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்லும் நபர்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

    பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பென்சன் தொகைக்கு விண்ணப்பம் செய்திருக்கும்போது தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது 30 வயதை தாண்டியிருக்க வேண்டும். தற்போது பென்சன் தொகை வாங்கி வரும் முன்னாள் வீரர்களுக்கு இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்தே நடைமுறைக்கு வந்துள்ளது.
    ×