search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewing"

    • தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    • 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

    கரூர்

    கரூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் 16.8.2023 அன்று 40 வயதிற்குள் உள்ள ஆதரவற்ற விதவை, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் விலையில்லாமல் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் வருமான சான்று, இருப்பிட சான்று, 6 மாதம் தையல் பயிற்சிக்கான சான்று, கல்வி சான்று, பிறப்பு சான்று, சாதி சான்று, விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்டவர் அல்லது ஆதரவற்ற விதவை அல்லது வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை நகல், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கரூர் என்ற முகவரிக்கு வருகிற 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    • மத்திய, மாநில அரசு மற்றும் பெட்கிராட் இணைந்து தையல் மற்றும் டி.டி.பி. கம்ப்யூட்டர் 4 மாத இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
    • பயிற்சிக்கு பின் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.

    வாடிப்பட்டி

    மத்திய, மாநில அரசு மற்றும் பெட்கிராட் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் தையல் மற்றும் டி.டி.பி. கம்ப்யூட்டர் 4 மாத இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் அடிப்படை கணினி பயிற்ச்சி, பேஜ் மேக்கர் கோரல்டிரா, போட்டோசாப், ஸ்போக்கன் இங்கிலீஷ், திறன் மேம்பாட்டு பயிற்சியும், அடிப்படை தையல் முதல் பவர் மெஷினில் அனைத்து விதமான ஆடைகளும் மற்றும் ஆரி ஜர்தோசி, எம்பிராய்டிங் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதில் 18 வயது 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரும் கணினி பயிற்சிக்கும், பெண்கள் தையல் பயிற்சிக்கும் விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியாளர்களுக்கு இலவச சீருடை, பாட புத்தகம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பின் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, பெட்கிராட், வடக்கு வாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை.தொடர்புக்கு 89030 03090.

    ×