search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்கிராட்"

    • உணவுப்பொருட்கள் தயாரிக்க இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது என்று பெட்கிராட் தாளாளர் சுப்புராம் தெரிவித்தார்.
    • 88384-31943 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை பெட்கிராட் தொண்டு நிறுவனம் மற்றும் சுயதொழில் வேலை வாய்ப்பு நிறுவன தாளாளர் சுப்புராம் கூறியதாவது:-

    இந்திய தொழில் முனை வோர் மேம்பாட்டு நிறு வனம், அசெஞ்சர் நிறுவனம் மற்றும் சுபம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து மதுரை நாராயணபுரத்தில் இலவச தொழிற்பயிற்சி திட்டத்தை தொடங்கி யுள்ளது.

    இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் 19-ந் தேதி வரை 34 நாட்களுக்கு இந்த இலவச தொழில் பயிற்சி நடைபெறுகிறது.

    இந்த பயிற்சியில் காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல், உலர் பழங்கள் தயாரித்தல், சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்தல், மசாலா பொருட்கள் தயாரித்தல் ஆகியவை பயிற்சிகளாக வழங்கப்படு கின்றன. மேலும் இந்த உணவு பொருள்கள் தயாரிப்பது தொடர்பாக நேரடி செயல்முறை விளக்கங்களும் செய்து காண்பிக்கப்படுகிறது.

    இது தவிர சொந்தமாக தொழில் தொடங்க தேவை யான ஆலோசனை கள், வங்கி கடன் உதவி மற்றும் தயாரிக்கும் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு தேவையான முன் ஆலோ சனைகள் உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படு கிறது. இந்த இலவச பயிற்சி யில் பங்குபெறும் நபர்க ளுக்கு எப்.எஸ்.ஏ.ஐ சான்றி தழ் மற்றும் எம்.எஸ்.எம்.இ. சான்றிதழ்கள் பெற்று தரப் படுகிறது.

    எனவே விருப்பமுள்ள வர்கள் மதுரை, எஸ்.எஸ்.காலனி,வடக்குவாசல் முகவரியில் உள்ள சுபம் அறக்கட்டளை அலுவல கத்துக்கு நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ள லாம்.

    மேலும் 88384-31943 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு சுபம் அறக்கட்டளை மார்ட்டின் லூதர் கிங்கிடம் முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • பெட்கிராட் சார்பில் சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிக்க இலவச பயிற்சி நடந்தது.
    • சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிப்பு பயிற்சி தொடக்க விழா நடந்தது.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில், இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்ஜர் நிறுவ னம் மற்றும் மதுரை பெட் கிராட் தொழில் பயிற்சி நிறுவனம் இணைந்து சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிப்பு பயிற்சி தொடக்க விழா நடந்தது.

    பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் கிருஷ்ண வேணி, செயலாளர் சாராள் ரூபி, துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செய லாளர் அங்குசாமி வர வேற்று பேசினார். மதுரை மாநகராட்சி 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராம் குத்துவிளக்கேற்றி இலவச பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    கே.வி.ஐ.சி. உதவி இயக்குநர் அன்புச் செழியன் பேசுகையில், சுயதொழில் தொடங்க நகர்ப்புறத்தில் 25 சதவீதமும், புறநகர் பகுதி களில் 35 சதவீதமும் மானிய மாக வழங்குகிறோம். இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி நீங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.

    இ.டி.ஐ.ஐ. முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், இந்த பயிற்சிக்கு குறித்த நேரத்தில் வருகை தந்து கவனமாக கவனித்து செய்முறை விளக்கங்களை கேட்டு நீங்கள் சிறந்த தொழில் முனைவோராக மாற வேண்டும் என பேசினார்.

    ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முதுநிலை மேலாளர் சதீஷ்குமார் பேசுகையில், மகளிர் குழு பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என வும், சவுத் இந்தியன் வங்கி அலுவலர் மீனாட்சி சுந்தரி தொழில் தொடங்க முத்ரா லோன் பெறலாம் எனவும் பேசினர்.

    முடிவில் பயிற்சியாளர் கார்த்தியாயினி நன்றி கூறினார்.

    • மதுரையில் பெண்கள் பாலியல் தொல்லை சட்ட விழிப்புணர்வு முகாம் பெட்கிராட் சார்பில் நடந்தது.
    • நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் பெட்கிராட் இணைந்து "வேலை பார்க்கும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள்" குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் தையல் பயிற்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமையில் நடந்தது.

    பெட்கிராட் நிர்வாகிகள் சுருளி, சாராள்ரூபி முன்னிலை வகித்தனர். பொருளாளர் கிருஷ்ண வேணி வரவேற்று பேசினார்.

    மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுபட்டியல் வழக்கறிஞர்கள் சத்தியவதி, உமா சங்கர் ஆகியோர் நடை முறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு சட்டப்படி நடவடிக்கையை எப்படி நாம் கையாள வேண்டும் என்று சட்டம் பற்றி பேசினர்.

    தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் வெள்ளைப் பாண்டி இலவச பயிற்சி பெற்ற மாணவ-மாணவி களுக்கு சான்றிதழ்கள், பணி நியமன ஆணை வழங்கி பயிற்சி முடித்த பின்பு வேலைக்கு சென்று குடும்பத் தில் ஏற்படும் பொருளாதார சுமையை குறைத்து தொழில் முனைேவாராக மாற வேண்டும் என பேசினார். துணைத்தலைவர் மார்டின் லூதர்கிங் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் கண்ணன், இந்திரா, ரம்யா, டயானா ஜான்சிராணி, சிவகாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • மத்திய, மாநில அரசு மற்றும் பெட்கிராட் இணைந்து தையல் மற்றும் டி.டி.பி. கம்ப்யூட்டர் 4 மாத இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
    • பயிற்சிக்கு பின் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.

    வாடிப்பட்டி

    மத்திய, மாநில அரசு மற்றும் பெட்கிராட் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் தையல் மற்றும் டி.டி.பி. கம்ப்யூட்டர் 4 மாத இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் அடிப்படை கணினி பயிற்ச்சி, பேஜ் மேக்கர் கோரல்டிரா, போட்டோசாப், ஸ்போக்கன் இங்கிலீஷ், திறன் மேம்பாட்டு பயிற்சியும், அடிப்படை தையல் முதல் பவர் மெஷினில் அனைத்து விதமான ஆடைகளும் மற்றும் ஆரி ஜர்தோசி, எம்பிராய்டிங் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதில் 18 வயது 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரும் கணினி பயிற்சிக்கும், பெண்கள் தையல் பயிற்சிக்கும் விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியாளர்களுக்கு இலவச சீருடை, பாட புத்தகம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பின் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, பெட்கிராட், வடக்கு வாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை.தொடர்புக்கு 89030 03090.

    ×