search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Security rehearsal"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து படகு மூலம் கடலுக்கு சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பாதுகாப்பு ஒத்திகயைானது இன்றும், நாளையும் (2 நாட்கள்) கடலோர பகுதிகளில் நடைபெற உள்ளது.

    வேதாரண்யம்:

    இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன் போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து சாகர் கவாச் (கடல்கவசம்) பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதியில் இன்று தொடங்கியது.

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.

    அதன்படி, ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுரேஷ் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து படகு மூலம் கடலுக்கு சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலுக்கு செல்லும் வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரையும் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த பாதுகாப்பு ஒத்திகயைானது இன்றும், நாளையும் (2 நாட்கள்) கடலோர பகுதிகளில் நடைபெற உள்ளது.

    • காவலர் குழுவினர் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனசோதனை மற்றும் ரோந்துப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
    • ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் இந்த ஆண்டுக்கான முதல் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை தொடங்கியது.

    சென்னை:

    மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் 2 முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள 14 கடலோர பகுதிகளிலும் சென்னை முதல் குமரி வரை 'சாகர் கவாச்' என்ற பெயரில் இந்த ஆண்டுக்கான முதல் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை தொடங்கியது. இன்று மாலை வரை ஒத்திகை நடைபெறுகிறது.

    கடலோர பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு துறையினர் ஒருங்கிணைந்து இப்பாதுகாப்பு ஒத்திகை யினை நடத்தி வருகிறார்கள். இப்பாதுகாப்பு ஒத்திகை சம்பந்தமாக கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுக்கு சென்னை கமிஷனர் விரிவான அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் கூடுமிடங்கள், உயர் மட்டப் பாதுகாப்பு நிலைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காவல் அதிகாரிகளின் கண்காணிப்பில் காவலர் குழுவினர் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனசோதனை மற்றும் ரோந்துப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    நேற்று காலை முதல் சென்னையில் நடைபெற்று வரும் இப்பாதுகாப்பு ஒத்திகையின்போது, காவல் நிலைய எல்லையில் 3 பேர் திருவான்மியூர் எல்லையில் 2 பேர், காசிமேடு துறைமுகம் காவல் நிலைய எல்லையில் 3 பேர் மற்றும் துறைமுகம் காவல் நிலைய எல்லையில் 3 பேர் என சென்னை பெரு நகர காவல் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற மொத்தம் 11 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் போல ஆயுதங்களுடன் ஊடுருவிய கடலோர காவல்படையினரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சென்னை:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பயங்கரவாதிகள் கடல் வழியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு கடலோர பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    மாநில அரசுகள் தங்களது எல்லைகளுக்குட்பட்ட கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக 6 மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது. 2 நாட்கள் தொடர்ச்சியாக இந்த ஒத்திகையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த வீரர்கள் கடல் வழியாக பயங்கரவாதிகள் போல வேடமிட்டு ஊடுருவுவார்கள். இவர்களை உள்ளூர் போலீசார் மடக்கி பிடிக்க வேண்டும் என்பதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் முக்கிய உத்தரவாகும்.

    இதன்படி இன்று தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் போல ஆயுதங்களுடன் ஊடுருவிய கடலோர காவல்படையினரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சென்னையில் காசிமேடு, ராயபுரம் துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை பரபரப்பாக நடத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதே போன்று கடலோர பகுதிகளை எட்டியுள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்டால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றியும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    இதனையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுமார் 1 லட்சம் போலீசார் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளின் மேற்பார்வையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மேற்பார்வையில் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்திகையை கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் கண்காணித்தனர். செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமையில் மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒத்திகையை நடத்தினர்.

    நாளையும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாரை உஷார்படுத்தி உள்ளார்.

    இந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது கவனக்குறைவாக செயல்படும் போலீசாரிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ×