search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Satikudi"

    • கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    சேலம்:

    ஆந்திராவில் ராஜமுந்திரி, புலிவேந்தலா, கடப்பா, நந்திமண்டல், நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாத்துக்குடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சாத்துக்குடி இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு வழக்கத்தை விட, வரத்து அதிகரித்துள்ளது.

    ஆந்திராவில் கடந்த ஒரு மாதமாக சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலத்திற்கு வழக்கமாக 30 டன் சாத்துக்குடி விற்பனைக்கு வரும். ஆனால் சில நாட்களாக 50 டன்னுக்கு மேல் விற்பனைக்கு வருகிறது. ஆயுதபூைஜக்கு முந்தைய நாள் இதன் வரத்து 70 முதல் 80 டன்னாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தற்போது அளவு பொறுத்து சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ×