search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Refusal to marry"

    • பிரகாஷ் என்பவருக்கும் விஜிக்கும் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் ந டைபெற்றது.
    • திருமணம் செய்வதாக நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை நேருஜி வீதியை சேர்ந்தவர் விஜி (33) .இவருக்கும் தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவைசேர்ந்த பிரகாஷ் (36) என்பவருக்கும் கடந்த 23ம் தேதி அங்குசெட்டி ப்பாளை யத்தில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம்ந டைபெ ற்றது.இந்தநிலையில் பெண் வீட்டார் மாப்பிள்ளையிடம் திருமண நாள் பற்றி கேட்டுள்ளனர் . அப்போது மாப்பிள்ளையும் அவரது வீட்டாரும்வரதட்சனையாக 10 பவுன் கேட்டு அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    திருமணம் செய்வதாக நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக மணமகள் விஜியின் அண்ணன் கோவிந்தராசு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்துமகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்வள்ளி வழக்கு பதிவு செய்து நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பிரகாஷ், மாப்பிள்ளையின் அண்ணன் முரளி, அண்ணிவச்சலா,தாய் தயாநிதிஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை யில்அடைத்தனர்.

    பண்ருட்டி அருகே திருமணம் செய்வதாக கூறி பள்ளி ஆசிரியையிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி, விவசாயி. இவரது மகள் பிரேமா (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சின்னமணி (28) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    ஆசிரியை பிரேமாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சின்னமணி அவருடன் முந்திரி தோப்பில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சின்னமணியிடம் பிரேமா கூறினார். இதற்கு சின்னமணி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவரது தந்தை கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் ரவிச்சந்திரன், ஜெயக்குமாரி, முத்துலட்சுமி ஆகியோர் பிரேமாவை தலை முடியை இழுத்து தள்ளி அடித்து தாக்கியதாக தெரிகிறது.

    இது பற்றி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் பிரேமா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து கல்லூரி பேராசிரியர் சின்னமணியை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி கணேஷ் விசாரித்து சின்னமணியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பேராசிரியர் சின்னமணி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews
    ×