search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rape and murder"

    • மதிக்கத்தக்க பெண் உடலில் உடையின்றி உப்பிய நிலையில் நிர்வாணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • காவல்நிலையத்திற்கு பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையம் அருகே, தியாகி திருநாவுக்கரசு நகரை ஒட்டி, வாய்க்கல் ஒன்று உள்ளது. வாய்க்காலை ஒட்டிய வயல்வெளிகளில், அப்பகுதி சிறுவர்கள் நத்தை பிடிப்பது வழக்கம். வழக்கம் போல், சிறுவர்கள் சிலர், அப்பகுதி யில் நத்தை பிடித்து கொண்டிருந்த போது, வாய்க்கால் நீரில், 40 லிருந்து 45 வய து மதிக்கத்தக்க பெண், உடலில் உடையின்றி உப்பிய நிலையில் நிர்வாணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடந்து சிறுவர்கள் அங்குள்ளோரிடம் விபரத்தை கூறினர்.

    அதன்பேரில், எம்.ஜி.ஆர் நகர் சுனாமி குடியிருப்பைச்சேர்ந்த மினி லாரி டிரைவர் ராஜீவ் காந்தி என்பவர், காரைக்கால் நகர காவல்நிலையத்திற்கு பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். மேலும், அந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிலர் பெண்ணின் உடலை பார்த்து அடையாளம் தெரியாத காரணத்தால், யாரோ, இந்த பெண்ணை இங்கு கொண்டுவந்து கற்பழித்து கொலை செய்தி ருக்கலாம்என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×