என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "quality education"
- தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்திற்கு வெளிமாநில மாணவர்கள் வருகிறார்கள்.
- மாணவ, மாணவிகள் படிக்கும்போது, நல்ல முைறயில் படிக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண் டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ் ணன்கோவில் வி.பி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழா வுக்கு கல்லூரி சேர்மன் வி.பி.எம்.சங்கர் தலைமை தாங்கினார். தாளாளர் பழனிசெல்வி சங்கர் முன் னிலை வகித்தார்.
மாணவிகளுக்கு பட்டம்
கல்லூரி துணைத்தலை வர் தங்க பிரபு, சிந்துஜா தங்கபிரபு ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றனர். விழாவில் அன்னை ெதரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந் தர் டாக்டர் கலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 1,500 மாணவிக ளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப் போது அவர் பேசியதாவது:-
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவிக ளுக்கு பட்டம் வழங்குவத மிகவும் பெருமையாக உள் ளது. மேலும் இந்த கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக அளவில் தேர்வில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.
தரமான கல்வி
இந்தியாவில் உள்ள மாநி லங்களில் தமிழகத்தில் கல் வியின் தரம் சிறப்பாக உள் ளது. எனவே பல்வேறு மாநி லங்களில் இருந்தும், பல் வேறு நாடுகளில் இருந் தும் இந்த தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்தை நோக்கி மாணவ, மாணவி கள் வருகிறார்கள்.
எனவே தரமான கல் வியை ஆசிரியர்கள் மாண–வர்களுக்கு போதிக்க வேண் டும். கல்வி கற்பதன் மூலம் மட்டுமே ஒரு உண்மையான, தெளிவான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆகவே மாணவ, மாணவிகள் படிக்கும்போது, நல்ல முைறயில் படிக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண் டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்டமளிப்பு விழாவில், கல்லூரி இயக்குனர் நாச்சியார் கண்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து
கொண்டனர்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அப்பகுதி பொதுமக்களை நேரில் சென்று சந் தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி கருத்து கேட்கலாம் என்று தெரிவித்தார்.
- காமராஜர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி வீரக்குமார் ஆகியோரை வரவைத்து சிறப்பு ஆலாசனை கூட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரபேட்டையில் அமைந்துள்ள காமராஜர் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் குறைவாக உள்ளதால் வகுப்புகளை கலைத்து அருகாமையில் உள்ள பள்ளிக்கு மாணவர்களை மாற்றம் செய்ய கல்வித்துறை முயற்சித்தது.
இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கெ ன்னடியை சந் தித்து கல்வித்துறை துணை இயக்குனர் தெரிவித்தார். அதில் நாட்டம் இல்லாத அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அப்பகுதி பொதுமக்களை நேரில் சென்று சந் தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி கருத்து கேட்கலாம் என்று தெரிவித்தார். பின்னர் கல்வித்துறை துணை இயக்குனர் நடன சபாபதி, காமராஜர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி வீரக்குமார் ஆகியோரை வரவைத்து சிறப்பு ஆலாசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் அனைவரும் பள்ளி இங்கேயே தொடர்ந்து இயங்க வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கூறுகையில், ''பள்ளி மாணவர்களை இடம் மாற்றம் செய்வதற்கு பதிலாக பள்ளியில் ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தி தரமான கல்வி கொடுக்க வேண்டும், காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளி இதே இடத்தில் இங்கு சிறப்பாக செயல்பட்டு கொண்டி ருக்க வேண்டும'' என தெரிவித் தார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, காலப்பன், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்