என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "polio vaccine"
- பிறந்தது முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி பணிகள் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற்று வருகிறது.
- 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகளுக்கு எப்.ஐ.பி.வி. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
திருப்பூர் :
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் பணிகளில் முக்கிய அங்கமாக தடுப்பூசி பணிகள் நடக்கிறது. தமிழகத்தில் பிறந்தது முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி பணிகள் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற்று வருகிறது. போலியோ நோயை தடுப்பதற்காக தடுப்பூசி வாய்வழியாக 5 தவணையும், தோல்வழியாக 1½ மாதம் மற்றும் 3½ மாதம் என 2 தவணையாக கொடுக்கப்படுகிறது.
தற்–போது கூடுதலாக தோல் வழியாக செலுத்தப்படும் எப்.ஐ.பி.வி.என்ற போலியோ மருந்து 9 மாத முடிவில் எம்.ஆர். தடுப்பூசி போடும் போது வழங்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகளுக்கு எப்.ஐ.பி.வி. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாளை முதல் புதிய போலியோ தடுப்பூசி அமலாகிறது. இதன் மூலமாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக நடவடிக்கையில் இறங்கிய அரசு, போலியோ தடுப்பு மருந்துகளை தயாரித்து வழங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல் வைத்தது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மூட சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் ஏராளமான குழந்தைகள் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் பலியானதற்கும் இந்த மருந்து கலப்படத்திற்கும் சம்பந்தம் உள்ளதா? என்ற ரீதியிலும் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இந்த நிறுவனத்தால் வினியோகிக்கப்பட்ட போலியோ மருந்துகளை விநியோகம் செய்யாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. #PolioVaccine
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்