search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poisonous gas attack"

    நெமிலி அருகே வி‌ஷ வாயு தாக்கி மாமனார், மருமகன் பலியான சம்பவம் அவலூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 54) விவசாயி. இவர் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார். கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் விவசாய கிணற்றில் மோட்டார் பழுதானது.

    மின் மோட்டாரை சரி செய்வதற்காக அவரது மருமகன் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் சுபாஷ் (24) என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று விவசாய நிலத்துக்கு சென்றனர்.

    இருவரும் கிணற்றில் இறங்கி மோட்டாரை சரி செய்யும் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வி‌ஷவாயு தாக்கியதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் உடல்கள் கிணற்றில் மூழ்கியது.

    நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றனர். அப்போது விவசாய கிணற்றின் அருகில் துணி பொருட்கள் இருந்தன. இதனால் அவர்கள் கிணற்றுக்குள் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    இதுகுறித்து ராணிப்பேட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரம் போராடி 2 பேரின் உடல்களை மீட்டனர். அவலூர் போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விவசாய கிணற்றில் வி‌ஷவாயு தாக்கியது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் மின்சாரம் தாக்கி இறந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அவலூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    குடியாத்தம் அருகே குடிநீர் தொட்டி சுத்தம் செய்த போது வி‌ஷ வாயு தாக்கி 2 பேர் மயங்கி விழுந்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் சச்சின் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் தங்கம் நகர் 1-வது தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில் உள்ள 15 அடி ஆழ தரை தள குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்வதற்காக வேலைக்கு சென்றனர்.

    கடந்த 2 நாட்களாக வேலை பார்த்து வந்த நிலையில் இன்று வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது தொட்டியை சுத்தம் செய்ய கெமிக்கல் ரசாயனத்தை பயன்படுத்தினர்.

    அந்த ரசாயனத்தில் இருந்து வெளியேறிய வி‌ஷ வாயுவினால் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை கண்ட நடராஜன் குடியாத்தம் தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தொட்டியில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

    போலீசார் அவர்களை குடியாத்தம் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×