search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PENALTY FOR LITTERING"

    • நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
    • பிளாஸ்டிக்கை முழுமை யாக தடை செய்யவும், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற பணிகளை பணியாற்றவேண்டும் என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் நம்மஊரு சூப்பர் 2-ம் கட்ட விழிப்புணர்வு பிரச்சார பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணை ப்புக்குழு கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா தெரிவித்ததாவது,

    தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி தேனி மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பற்றிய மக்கள் பங்கேற்புடன் கூடிய சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் கடந்த 2022 ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை நடைபெற்றது. இதன்மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

    இதைதொடர்ந்து 2-ம் கட்டமாக வரும் மே 1 முதல் ஜூன் 15 வரை கிராம ஊராட்சி பகுதிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பற்றிய நம்ம ஊரு சூப்பரு சிறப்பு விழிப்பு ணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது. கிராமப்பகுதிகளில் இந்த சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் பொருட்டு இதை சிறப்பாக நடத்துவதற்கு நியமிக்க ப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் முறையாக தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சுயஉதவி க்குழு உறுப்பினர்கள் மூலமாக நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும். துப்புரவு மற்றும் திட, திரவ கழிவு மேலாண்மைக்காக வழங்கப்படும். அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளின் செயல்பாட்டை உறுதி செய்தல், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பதுடன் அனைத்து இடங்களிலும் குப்பை இல்லாமலும், திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருப்பதை உறுதி செய்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமை யாக தடை செய்யவும், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற பணிகளை மாவட்ட அள விலான ஒருங்கிணை ப்புக்குழு அனைத்துத்துறை அலுவலர்கள் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    • திருச்சியில் டீக்கடைகள், வீடு கட்டுவோர் கழிவுகளை வீதியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • கோவில் நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் கலந்து கொள்ளும் போது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்

    திருச்சி:

    திருச்சி மாநகர பகுதிகளில் மாநகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கை மற்றும் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சியில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநகர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வியாபரம் செய்வது, சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட செயல்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    அதைத்தொடர்ந்து மாநகரில் செயல்படும் ஓட்டல்கள், டீ கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் வியாபாரிகள் வியாபாரம் ெசய்யும் போது அந்த கடைகளின் குப்பபைகளை முறையாக குப்பைத் தொட்டி வைத்து மாநகராட்சி குப்பை வாகனங்கள் வரும் பொழுது எடுத்து கொட்டவேண்டும்.

    அவ்வாறு செய்யாமல் குப்பைகளை கடைகளுக்கு முன்பாக வைத்திருத்தல், சாலைகளில் வீசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், திருச்சி மாநகர் பகுதியில் தற்போது தூய்மை பணிகள் நல்ல முறையில் நடந்து வருகிறது. இன்று காலையில் உய்கக்கொண்டான் வாய்க்கால் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் கலந்து கொள்ளும் போது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.

    குறிப்பாக வீடு கட்டும் கழிவுகள், டீ கடைகளில், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வரும் குப்பகைளை சாலையில் ஏதாவது ஒரு மூலையில் கூட்டி வைத்திருந்தாலோ, அல்லது கொட்டி வைத்திருந்தாலோ அதை அதிகாரிகள் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டால் வியாபாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    வீடு கட்டும் கழிவுகளை சாலையோரம் பொது மக்களின் சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் கொட்டி வைத்தால் அதை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    ×