search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutrient Vault"

    • 1,182 வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் வழங்கினார்.
    • இதில் 18,677 மாணவி களுக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரணி பள்ளியில் கர்ப் பிணிகள், மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங் கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி னார்.

    பின்னர், அவர் பேசியதாவது:-

    இரும்புப் பெண்மணி திட்டம் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை மூலம் ஊட்டச்சத்து பெட்ட கங்கள் வழங்கப்பட்ட2-இரண்டாம் கட்டமாக இந்த திட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் 43,755 வளரிளம் பெண்களுக்கு ரத்தசோகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் 18,677 மாணவி களுக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப் பட்டது. ரத்தசோகை குறை பாடுள்ளவர்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சையளிக்கப்பட்டது. தீவிர ரத்தசோகை உள்ள 1,182 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக திருச்சுழி தொகுதியில் உள்ள 18 பள்ளிகளை சேர்ந்த 50 மாணவிகள், 7 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதைப் போல மாவட்டத்தின் மற்ற வட்டாரங்களில் தீவிர ரத்தசோகையினால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்ட கத்தினை பெற்றோர்கள் மூலம் சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலை யங்களில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒரு குழந்தைக்கு மாதந்தோறும் ஒரு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப் படும். 3-வது மாத முடிவில் மதிப்பீடு செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். எனவே இரும்பு சத்து குறைபாட்டை போக்க தற்போது வழங்கப் பட்டு வரும் மாத்திரைகள் ஊட்டச்சத்து பொருட்க ளோடு, அன்றாட உணவில் சமச்சீரான ஊட்டச் சத்துக்கள் அடங்கிய உணவுகளை உட்கொண்டு வரும் பட்சத்தில் ரத்த சோகை குறைபாட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள்ஆக மொத்தம் 32,51,509 பயனாளிகள் பயன் பெறுகின்றனர்.
    • 2-6 வருடம் வரையிலான குழந்தைகளுக்கு 50 கிராம் வீதம் ெகாழுக்கட்டை , கஞ்சி மற்றும் உருண்டையாக வழங்கப்படுகிறது.

    திருப்பூர்:

    சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்தகுழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனைமேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டம்.இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 0-6வயது குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள்ஆக மொத்தம் 32,51,509 பயனாளிகள் பயன் பெறுகின்றனர். இத்திட்டங்களை பயன்படுத்த வருமான வரம்பு ஏதுமில்லை. தகுதியுடைய அனைவரும் தங்கள்இல்லத்திற்கு அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் (அங்கன்வாடி) பதிவு செய்துபயன் பெறலாம். 2 முதல் 6 வயது வரையிலான மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளுக்குஆடிப்பாடி விளையாடு பாப்பா பாடத்திட்டத்தின் படி விளையாட்டு மூலம் மாதம் ஒருதலைப்பின் மூலம் உடல், மனம், அறிவு, மொழி, சமூக வளர்ச்சியை உருவாக்கும் கல்விவழங்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு உணவூட்டுதல், கணவன்மார்களுக்கான விழிப்புணர்வு, பொதுசுகாதாரம் ஆகிய சமுதாய நிகழ்வுகள் மாதம் இரு முறை மையத்தில்நடத்தப்படுகின்றது.

    தமிழக முதல்வர் முன்னோடி திட்டமானஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ்ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் பயனாளர்களான 0 மாதம் முதல்6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்குஇரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 0 மாதம் முதல் 6 மாதம் வரை மிதமானஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம்வழங்குவதும், மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையானஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்கு (56 நாட்களுக்கு) Ready to use Therapeutic Food வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினைமேம்படுத்துவதாகும். இத்திட்டமானது தமிழக முதல்-அமைச்சரால் 28-2-2023 அன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இத்திட்டத்தினை அனைத்துமாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் திருப்பூர் மாவட்டகலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைளுக்குசிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை தமிழ்வளர்ச்சி மற்றும்செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 4.3.2023 அன்று துவக்கி வைத்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் 0 மாதம் முதல் 6 மாதம் வரை கடுமையானஊட்டச்சத்து குறைபாடுள்ள 451 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 902எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், 0 மாதம் முதல் 6மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 549 குழந்தைகளின் தாய்மார்களுக்கு549 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும் என மொத்தம் 1451ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் 6 மாதம் முதல்6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 2430 குழந்தைகளுக்கு Ready to use Therapeutic Food வழங்கப்பட்டுள்ளது. சத்துமாவு வழங்கபடும் அளவானது 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 125 கிராம் வீதம் மாதத்திற்கு 3.125 கி.கி., வழங்கப்படுகிறது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டு தாய்மார்களுக்கு தினமும் 150 கிராம் வீதம் மாதம் 3,750 கி.கி. வழங்கப்படுகிறது. 2-6 வருடம் வரையிலான குழந்தைகளுக்கு 50 கிராம் வீதம் ெகாழுக்கட்டை , கஞ்சி மற்றும் உருண்டையாக வழங்கப்படுகிறது.

    முட்ைட வழங்கப்படும் விதமானது 1-2 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்தில் 3 முட்டை வீட்டில் வழங்கப்படும். 2-6 வருடம் வரையிலான குழந்தைகளுக்கு வாரம் 3 நாட்கள் முட்டையுடன் மதிய உணவு குழந்தை மையத்தில் வழங்கப்படும். கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் 2 வயது வரை 60 கிராம், 2-6 வயது வரையிலான குழந்தைகளுக்கு 30 கிராம் வழங்கப்படுகிறது. இத்தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் பயனாளர்களான முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவது, மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்குப் சத்தான ஊட்டச்சத்து வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதாகும்

    வேலூர் மாவட்டத்தில் முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 215 குழந்தை களின் தாய்மார்களுக்கு 430 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், 0 மாதம் முதல் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1206 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1206 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், மொத்தம் 1636 ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1027 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட முழுவதும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க படுகிறது.

    • முதல்-அமைச்சரின் சீரிய திட்டம்
    • கலெக்டர் வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் ஊட்டச்சத்து குறை பாடுள்ள, பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரையிலான 2,583 குழந்தைகள் மற்றும் 56 நாட்கள் ஊட்டச்சத்து உண வுகளை சாப்பிட பாலூட்டும் தாய்மார்களுக்கும் தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்து பெட்ட கம் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, ஊட்டச்சத்து பெட்ட கத்தை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ரா ணிப்பேட்டை மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரை 64 ஆயி ரத்து 599 குழந்தைகள் ஊட் டச்சத்து குறைபாடு உள்ள வர்களாக கணக்கெடுக்கப் பட்டுள்ளனர். இவர்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் 2,583 பேர் என கண்டறியப் பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிட தமிழ்நாடு முதல்- அமைச்சரின் சீரிய திட்டமான ஊட்டச் சத் தினை உறுதி செய் திட்டத் தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் உணவுகள் வழங்கப்படுகிறது.

    இந்த உணவுகள் ஊட்டச் சத்து குறைபாடு கண்டறியப் பட்ட குழந்தைகளுக்கு 56 நாட்கள் தொடர்ந்து கிடைக் கும் வகையில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங் கப்பட்டு, குழைந்தைகளின் எடை, உயரம் அளவீடு செய்து ஊட்டச்சத்து உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளது.

    கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைக ளின் தாய்மா ர்களுக்கு ஊட் டச்சத்து பெட்டகம் தலா இரண்டு வழங்க ப்படுகிறது. மிதமான ஊட்டச்சத்து குறை பாடுள்ள 1,081 குழந்தைகளுக்கும், அவர்க ளின் தாய்மார்க ளுக்கும் தலா ஒரு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப்படு கிறது. இந்த பெட்டகத்தில் ஊட்டச்சத்து பவுடர், பேரிச் சம்பழம், நெய், வைட்டமின் டானிக், குடற்புழு நீக்க மாத் திரை, டவல், டம்ளர் ஆகிய வைகள் உள்ளது.

    அதே போன்று 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,960 குழந்தைகளின் ஊட்டச் சத்திற்காக உணவு வழங்கப்ப டுகிறது. ஆகவே தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவுகளை தவறாமல் சாப்பிடவும், குழந் தைகளுக்கு ஊட்டச்சத்து உணவை தொடர்ந்து வழங்கி குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அரசுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கிட வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அம்சப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×