search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Norway Chess"

    நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவுக்கு எதிரான 8-வது சுற்று போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். #ViswanathanAnand #NorwayChessChampionship

    ஆஸ்லோ:

    நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்திய வீரர்  விஸ்வநாதன் ஆனந்த் தனது எட்டாவது போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். இதையடுத்து முதலிடத்தில் இருந்த ஆனந்த் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளார். வீஸ்லி சோ - அமெரிக்கா, பேபியானோ கார்வானா - அமெரிக்கா, கார்ல்சன் - நார்வே, ஹிகாரு நாகமுரா - அமெரிக்கா ஆகியோர் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.  #ViswanathanAnand #NorwayChessChampionship
    நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவுக்கு எதிரான 7வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார். #ViswanathanAnand #NorwayChessChampionship

    ஆஸ்லோ:

    நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்திய வீரர்  விஸ்வநாதன் ஆனந்த் தனது ஏழாவது போட்டியில் பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவை எதிர்கொண்டார். இப்போட்டியின் 40-வது நகர்த்துதலின் போது மேக்ஸ்மி தோல்வியை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆனந்த், 1 புள்ளி பெற்றார். 

    இதன் மூலம் இதுவரை 7 போட்டியில் விளையாடியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் வீஸ்லி சோ (3.5 புள்ளிகள்), நார்வேவின் கார்ல்சன் (3.5 புள்ளிகள்), அர்மேனியாவின் லெவான் அரோனியன் (3.5 புள்ளிகள்) ஆகியோரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். #ViswanathanAnand #NorwayChessChampionship
    நார்வே நாட்டின் ஸ்டாவாங்கரில் நடைபெற்று வரும் அல்டிபாக்ஸ் நார்வே செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த்த டிரா செய்துள்ளார்.
    நார்வே நாட்டின் ஸ்டாவாங்கரில் அல்டிபாக்ஸ் நார்வே செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந்தேதி தொடங்கிய இந்த தொடர் ஜூன் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    பல சாம்பியன் பட்டங்களை வென்ற இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்த் தனது முதல் ஆட்டத்தில் திங்கட்கிழமை (28-ந்தேதி) அர்மெனியாவின் லெவோன் அரோனியனை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.



    இந்நிலையில் 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டார். கருப்பு காய்களுடன் விளையாடிய ஆனந்த் 39 நகர்த்தலுக்குப் பின் டிரா செய்தார். இதனால் முதல் இரண்டு போட்டிகளையும் ஆனந்த் டிரா செய்துள்ளார்.

    தொடக்க சுற்றில் மேக்னஸ் கார்ல்சென் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். மற்ற அனைவரும் டிரா மட்டுமே செய்தனர். ஆனால் 2-வது சுற்றில் செர்ஜெய் கர்ஜாகின் எதிராக டிரா செய்தார்.
    ×