search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Anganwadi Building"

    • புதிய அங்கன்வாடி கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • அங்கன்வாடி பணியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வாகுடி ஊராட்சி புதிய அங்கன்வாடி கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாயாண்டிச்சாமி அணைவரையும் வரவேற் றார். இந்த புதிய கட்டிடத்தில் அதிநவீன வசதிகளும் செய் யப்பட்டுள்ளது. இதேபோல் அதே பகுதியல் மின் தட்டுப்பாட்டை போக்க அதிக திறன் கொண்ட புதிய மின்மாற்றியை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்து இயக்கி வைத்தார்.இந்த விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் லதா, ஒன் றிய செயலாளர் அண்ணா துரை, ஊராட்சி துணை தலைவர் முத்தையா, வாகுடி கிளை செயலாளர் வேலுசாமி, வாகுடி காலணி கிளை செயலாளர் ராஜேந் திரன், அன்னியேந்தல் கிளை செயலாளர் மணிகண் டன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப் ரகு மான், மேல பசலை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா, மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்குராஜா, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியம், வீரம்பாக்கம் புதூரில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அனுக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், செய்யாறு சர்க்கரை ஆலை இயக்குனருமான எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் ஒ. ஜோதி எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜி, நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், திராவிட முருகன், சங்கர், ரவிக்குமார், திமுக நிர்வாகிகள் புரிசை சிவக்குமார், செய்யாமூர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×