search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.13.57 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம்
    X

    செய்யாறு வீரம்பாக்கம் புதூரில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஒ. ஜோதி எம்.எல்.ஏ., சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்த போது எடுத்த படம்.

    ரூ.13.57 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம்

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியம், வீரம்பாக்கம் புதூரில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அனுக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், செய்யாறு சர்க்கரை ஆலை இயக்குனருமான எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் ஒ. ஜோதி எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜி, நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், திராவிட முருகன், சங்கர், ரவிக்குமார், திமுக நிர்வாகிகள் புரிசை சிவக்குமார், செய்யாமூர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×