என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Motor vehicle Bill
நீங்கள் தேடியது "Motor Vehicle Bill"
கோரிக்கைககளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் கோவையில் டாக்சி, ஆட்டோ நாளை ஓடாது என்று போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கோவை:
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். டோல்கேட் வசூலை கைவிட வேண்டும். இன்ஸ்சூரன்ஸ் பெயரில் அடிக்கும் கொள்ளையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (7-ந் தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
இதில் கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ) பங்கேற்கிறது. நாளை காலை 10 மணிக்கு கோவை டவுன் ஹால் பகுதியில் மறியல் போராட்டத்தையும் நடத்த உள்ளோம். நாளை வேலை நிறுத்தத்தின் போது டெம்போ, டாக்சி, வேன், மினிடேர், மேக்சி கேப், டாடாஏசி, ஆட்டோ, லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடாது.
பள்ளிகளுக்கு இயக்கப்படும் ஆட்டோ, வேன் போன்றவைகளையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட அளவில் ஆட்டோ, கால் டாக்சி உள்பட சுமார் 38 ஆயிரம் வாகனங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறது. சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X