என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Monument"
- அக்டோபர் மாதம் 21-ந்தேதி காவலர்கள் நினைவு தினம் கடை பிடிக்கப்படுகிறது.
- 189 பேருக்கு மரியாதை செலு த்தும் நிகழ்ச்சி மாவட்ட ந்தோறும் இன்று நடைபெற்றது.
நெல்லை:
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி காவலர்கள் நினைவு தினம் கடை பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பணியின்போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தப்படும்.
அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வரை பணியின் போது உயிரிழந்த வர்களுக்கு இன்று வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அதன்படி தமிழக காவலர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 189 பேருக்கு மரியாதை செலு த்தும் நிகழ்ச்சி மாவட்ட ந்தோறும் இன்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவலர்கள் நினைவு சின்னம் முன்பாக 30 குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருமான (பொறுப்பு) பிரவேஷ்குமார் கலந்து கொண்டு மலர்வ ளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதேபோன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பர சன், மாநகர போலீஸ் துணை கமிஷ னர்கள் தலைமையிடம் அனிதா, கிழக்கு மண்டலம் ஆதர்ஷ் பசேரா, மேற்கு மண்டலம் சரவணக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்